11 January 2013

கடல் படத்தின் கதை என்ன

என்னடா படமே வரவில்லை அதற்குள் கதை கிதை என சொல்றான் என கேட்கிறிங்களா! நாம யாரு புறாவுக்கே மணி அடித்த கூட்டம் ஆச்சே, அதானுங்க Trailer பார்த்து கதை சொல்ற கூட்டம்! இன்றுதான் Trailer வந்திச்சு அதை வைச்சு இப்படி இருக்குமா அப்படி இருக்குமா என ஊகித்து எழுதுகிறேன்; அம்புட்டுதான்!

கதை என்னென்னா , கார்த்திக்கின் செல்ல புதல்வன் கவுதம் ஒரு அநாதை அவர் மீனவர் குப்பத்திலே அவர்களில் ஒருவனாக வளருகிறார். அங்கே பாதிரியாராக வரும் அரவிந்தசாமி கவுதம் மேல் இரக்கம் கொண்டு உதவுகிறார். கவுதம் பெரியவன் ஆனதும் அர்ஜுனிடம் அடியாளா சேருகிறார். அரவிந்தசாமி  அதை விட்டு வெளியே வரும் படி கூறுகிறார் ஆனால் அவர் மறுக்கிறார். அவருக்கு ஒரு காதல் வருகிறது; வந்தது ராதா மகள், கார்த்திகா தங்கை துளசி மேலே! காதலி  சொல்வதால் அதை விட்டு வெளியே வர முயற்ச்சிக்கிறார்.............

இவ்வளவும் நாங்கள் எத்தனயோ படங்களில் பார்த்து புளித்துப்போன கதை+காட்சி. இதை மணிரத்தனம்,  ஜெமோ வின் துணையுடன் எப்படி வித்தியாசமா சொல்ல/தர போகிறார் என்பதே எதிர் பார்ப்பு.

ஆங், கிளைமாக்ஸ் சொல்ல மறந்திட்டேன்; இவ்வளவும் பல படங்களில் வந்தவை என்றாலும் அந்த கிளைமாக்ஸ் நிச்சயம் வித்தியாசமானதா இருக்கும் என நம்புகிறேன். அதற்க்கு காரணம் உண்டு. மணிரத்னம்+ஜெமோ. Trailer இல் கிளைமாக்ஸ் என்ன என்று சொல்லல அதனால எனக்கு தெரியல! அதை வெண்திரையில் கண்டுகளியுங்கள். இப்போ அதன் Trailer ஐ கண்டு களியுங்கள். 






இந்த துளசி பொண்ணு சமத்தா இருக்கு சமந்தா போல :)

No comments:

Post a Comment