24 December 2012

கிரிக்கெட்டின் கடவுள்

வாழ்வில் எமக்கு சில, பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சிலவே எம்மை ஒன்றாக இணைக்கிறது. அதில் ஆசிய நாட்டவர்களுக்கு கிரிக்கெட் முக்கியமானது. (சினிமாதான் உண்மையில் பல கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக உள்ளது). அதிலும் ஒரு சிலர் இன, மதத்தை கடந்து அல்ல நாட்டையும் கடந்து கவருவார்கள். அதில் முக்கியமானவர் யார் என்று கேட்டால் அநோகரின் ஒருமித்த குரல் "சச்சின்". அந்த சச்சின் தனது 23 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் (சர்வதேச ஒருநாள் போட்டிகள்) இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்.



நான் எப்போ கிரிக்கெட் பார்க்க தொடங்கினேனோ அன்றில் இருந்து இன்று வரை பிடித்த வீரர்; அதவாது, அதை விரும்ப காரணமாக இருந்தவர்.கிரிக்கெட்டின் கடவுள் என்றால் எல்லோரும் சொல்லும் பதில் சச்சின், அவரை பிடிக்காதவர்களுக்கு கூட அவரின் பெயரே முதலில் நினைவு வரும்; வீம்புக்கு வாயில் இருந்து வேறு பதில் வரும். "கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதில் கடவுள் சச்சின்" இது வெறுமனே வரும் வார்த்தை இல்லை. கிரிக்கெட் மேல் அவர் கொண்ட பற்றுக்கு கிடைத்த மரியாதை.




இதுவரை சத்தத்தில் சதம், முதன் முதலில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம்/ஓட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம் சாதனைகளை. தன் வாழ்வின் லட்ச்சியமாக உலக கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார், அதை சச்சினின் உதவியுடன் தோணி நனவாக்கினார். சச்சினின் ரசிகனாக தோணிக்கும் நன்றி இந்த நேரத்தில்.




சில நேரங்களில் சற்று வீழ்ச்சிபாதையிலும் சென்று இருக்கிறார். ஆனால், மற்றவர்கள் வீழ்ந்ததை போல் அல்ல. அந்த நேரத்தில் கூட கடவுளாகவே இருந்தார் கிரிக்கெட் ரசிகர்களுக்கு. தன் 16 வயதில் இருந்து இன்று வரை எமக்காக விளையாடி கொண்டு இருக்கிறார். இனி அவரின் அதிரடியை இணையத்தில்தான் பார்க்கலாம். அதிரடி இல்லாட்டி என்ன, டெஸ்ட் போட்டிகளில் அவரின் துடுப்பாட்டத்தை ரசிக்கலாம். சில வேளைகளில் டெஸ்ட் போட்டியை பார்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும், கிரிக்கெட் கடவுளுக்காக. மீண்டும் ஒருமுறை, "கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதில் கடவுள் சச்சின்". 



 தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அடித்த 200* ஓட்டங்கள்.


16 December 2012

கேட்க கேட்க பிடிக்கும் - கடல்

நான், எல்லோரை போலவும் ஒரு இசை பிரியன். எனக்கு பிடித்தது ராஜாவும், அவர் வாரிசும் என்றாலும் நல்ல இசையை ரசிப்பேன். கிட்டத்தட்ட இன்னொரு வாரிசு போல இருந்த ரகுமானின் இசையில் வந்து இருக்கும் "கடல்" எப்படி இருக்கிறது???



மணிரத்னம்+ரகுமான் என்றால், படம் எப்படியோ ஆனால் பாடல்கள் ஹிட் ஆகும்  என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் சில வாரங்களுக்கு முதல் "நெஞ்சுக்குள்ளே" எனும் ஒரு பாடலை மாத்திரம் வெளியிட்டு இருந்தார்கள். வந்த மாத்திரத்தில் எல்லோருக்கும் பிடித்து விட்டது, அதன் இசையும், வரிகளும், பாடியவரின் குரலும். வழமையாக ரகுமானின் பாடல்களை கேட்க, கேட்கத்தான் பிடிக்கும். இது வந்த உடனே பிடித்து விட்டது. சரி, ஒரு பாட்டே இப்படி என்றால் எல்லா பாடல்களும் நல்லாக இருக்கும் என எதிர் பார்த்து இருந்தேன். இன்னொரு காரணம், இந்த கூட்டணி தந்த எதிர்பார்ப்பு.





நேற்றுதான் எல்லா பாடல்களையும் கேட்டேன். கேட்ட பின் எனக்கு தோன்றியது, இவருக்கு என்ன ஆகிவிட்டது இந்த முறை? இப்படி சொதப்பி விட்டரே என்று!! வழமையாக, படத்தில் உள்ள (ஒரே) ஒரு நல்ல பாடலை மாத்திரம் வெளியிடுவார்கள். நல்லா இருக்கும் போல என நினைத்து எல்லா பாடலையும் கேட்டால், மற்றது எல்லாம் கடுப்பேத்தும் எங்களை. அப்படித்தான் இருந்தது எனக்கும் இந்த "கடல்" பாடல்களும். அதனால் FB & Twitter என சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்தி இருந்தேன்.



இன்று காலையில், மீண்டும் Winamp ஐ ஒன் செய்து விட்டு Play Button ஐ அழுத்தினேன். "துப்பாக்கி" பாடலில் இருந்து ஆரம்பித்தது (இன்னமும் துப்பாக்கி பிடித்து இருக்கிறது) சில நிமிடங்களின் பின், "மூங்கில் தோட்டம்" என மெல்லிய வருடும் இசையில் ஒரு பாட்டு வந்தது. அப்படியே செய்து கொண்டு இருந்த வேலையே விட்டு விட்டு அதில் லயித்தேன். என்ன படம் என பார்த்தேன், "கடல்". பிறகு, மீண்டும் எல்லா பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்டேன் அமைதியாக.... ஒன்று, இரண்டானது, இரண்டு மூன்றாகி விட்டது இப்போ!! (01) நெஞ்சுக்குள்ளே (02) மூங்கில் தோட்டம் (03) மகுடி மகுடி என பிடித்து விட்டது.  ரகுமான் ரசிகர்கள் எப்போதும் சொல்லுவது, கேட்க கேட்கதான் பிடிக்கும் என.  உண்மைதான்!!!!





08 December 2012

9/11 உள் வீட்டு சதியா??

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் இப்போ மறுபடியும் பேசப்படுகிறது. எல்லோருக்கும் 9/11 என்று சொன்னால் உடனே புரியும். ஏன் மறுபடியும் பேசப்படுகிறது?? என்பதை எனக்கு தெரிந்த/அறிந்த சில விடயங்களை வைத்து சொல்கிறேன்.


அவர்கள் சொல்லும் காரணம் "9/11 Was an Inside Job" தெரிந்த பாஷையில் சொல்வது என்றால் "அது ஒரு உள் வீட்டு சதி". யார் செய்தது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். செய்தது அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி "ஜோர்ச் புஷ்". என்ன ஆச்சர்யமா இருக்கா? உண்மை அதுதான் என கிட்டத்தட்ட நிருபிக்க பட்டு இருக்கிறது. என்ன உண்மை??


முதலிலே, ஒரு கட்டிடத்தை ஒரு விமானத்தால் நடுப்பகுதியில் இடிக்கும் போது எப்படி கட்டிடம் முழுவதும் இடிந்த தரை மட்டம் ஆகும் (Building 7). அமெரிக்காவின் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் கேட்கும் கேள்வி இது. எப்படி முடிந்தது என்பதற்கும் அவர்கள் சொல்லும் காரணம், அந்த கட்டிடம் முழுவதும் வெடி மருந்துகளை வைத்து வெடிக்க வைப்பதன் மூலம் முடியும் என சொல்கிறார்கள். 




மற்றது, விமானம் கட்டிடத்தில் மோத முதலே அதில் இருந்து வெடி வெடித்து கட்டிடத்தை தாக்கியது. அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இப்போ வீடியோ ஆதாரம் கிடைத்து இருக்கிறது. ஆமா, என்ன வெடித்து?? விமானத்தில் பொறுத்த பட்டு இருந்த "ஏவுகனை"  மூலம் கட்டிடத்தை வெடிக்க வைத்த அடுத்த சில நொடிகளில் விமானம் மூலம் தகர்க்கபட்டது.


அப்போ விமானத்தில் இருந்த பயணிகள்?? அப்படி யாரும் போனால்தானே இறப்பதற்கு!! அது மட்டும் அல்ல, அமெரிக்கா இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து கொண்டு செய்த காரியாம்தான் இது. அதற்க்கு பிராயச்சித்தமாக இஸ்ரேலை சேர்ந்த ஒருவரும் உயிர் இழக்க வில்லை!! உலக வர்த்தக மையத்தில் கிட்டத்தட்ட 3,000 மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் அன்று எல்லோரும் வர வில்லை, இறக்கவும் இல்லை!! அது எப்படி சாத்தியம் ஆகிற்று??

இதற்க்கு பயன் படுத்த பட்ட விமானங்கள் பயணிகள் விமானம் இல்லை அது இராணுவத்தில் பயன் படுத்த படும் விமானம். அதற்க்கு சொல்ல பட்ட காரணம், அதில் எந்த விதமானமான ஜன்னல்களும் இருக்க வில்லை, அந்த விமானங்களை விமான நிலையங்களில் கண்டது கூட இல்லை, அது மட்டும் அல்ல விமானத்தின் முன் பகுதியில் நீல நிற இலச்சினை பொறிக்க பட்டு இருந்தது என FOX நிருபர் சொல்லி இருக்கிறார்.

பென்டகன் மீதோ வெள்ளை மாளிகை மீதோ தாக்க கொண்டு வந்த விமானம் இடை நடுவிலே விழுந்து நொறுங்கி விட்டது. பென்டகன் மீது விமானம் விழுந்தது. ஆனால் ஒரு பகுதியில் மாத்திரம். அங்கே ஏதாவது இருந்தால்தானே இருக்கும் கோப்புக்கள் அழிய. மற்றது, அந்தளவு பாதுகாப்பு வலயங்கள் எல்லாத்தையும் மீறி எப்படி வந்து தாக்கியது? எத்தனை ராடர்கள், எத்தனை விமான எதிர்ப்பு பீரங்கிகள். எப்படி மண்ணை தூவ முடிந்தது அவர்களால்??

உலகின் போலீஸ்காரனான அவன் வீட்டுக்குள்ளே புகுந்து அவுனுக்கே தெரியாமல் எப்படி விமானத்தை கடத்தி இதை செய்ய முடிந்தது இவர்கள் கூறும் இந்த "அல்கொய்தா" வினரால்?? அமெரிக்க, இஸ்ரேல் மட்டும் அல்ல CIA யின் உதவியுடன்தான் இதை செய்துஇருக்கிறார் புஷ் அவர்கள். நான் சொல்வதை விட சில வீடியோ இணைப்புக்களை தருகிறேன் அதன் மூலம் உண்மையை நீங்கள் அறியலாம். ஆமா, ஏன் இதை அவர்கள் செய்ய வேண்டும்?? அதற்கும் இன, மத ரீதியான பல காரணங்கள் உண்டு. அதை நான் இங்கே சொல்ல வந்தால் வீண் பிரச்சினைகள் வரும். நீங்களே அறிந்து கொண்டால் புத்திசாலி!!

29 November 2012

ஒலகம் அழிய போதா???

இப்போ எல்லோர் மனதிலும் இருக்கும் விடயம் 21.12.2012 மாயன் என்ற மக்கள் சொன்ன மாதிரி உலகம் அழிந்து விடுமா என்பதே?? பல பேரும் பலவிதமா ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்/செய்கிறார்கள். இந்த மாயன் என்பவர்கள் யார்/வரலாறு என்ன என்ற இதிகாசங்கள் இப்போ உங்களுக்கு சொல்ல வர வில்லை. அழியுமா, இல்லையா என்பதை பற்றி நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள்; அதனால் நானும் கிறுக்கவும், பிதற்றவும் வந்து இருக்கிறன்.




மேலே உள்ள படம்தான் மாயன்களின் நாட்காட்டி. இதுதான் முடிவடிகிறது 21.12.2012 அன்று.


பல பெரும் பல விதமாக சொல்கிறார்கள், அதில் ஒன்று "நிபுரு" எனும் கோள் பூமியை வந்து தாக்கும் என்று!! அது என்ன "நிபுரு"?? 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடு பட்டு கொண்டு இருக்கும் போது இதை கண்டதாக சொல்கிறார்கள் (நாசா இதை மறுத்து இருந்தது). அதாவது இது வந்து பூமியை தாக்கும் எனவும் அதனால் அழிவு உண்டாகும் எனவும் சொல்கிறார்கள். இது பூமியில் விழும் போது சுனாமி, நிலநடுக்கம் போன்றன ஏற்பட்டு பாரிய அழிவுகள் உண்டாகும் என கூற படிக்கிறது.
 
மேலே உள்ள படத்தை உற்று பாருங்கள்!! சூரியனுக்கு அருகில் ஒரு புள்ளி தெரிகிறது அதுதான் "நிபுரு" என சொல்கிறார்கள். உண்மையை நான் அறியேன். (உங்கள் போனிலோ அல்லது காமராவிலோ நீங்களும் எடுக்கலாம்)

 மற்றையது, பூமியும், சூரியனும் ஒரே கோட்டில் 21.12.2012 சந்திக்கின்றது என்றும், இதன் போது, துருவங்கள் மாற்றம் அடையும் எனவும் பூமி தன்னை மீளமைக்கும் எனவும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, வட, தென் துருவங்கள் மாறும். இன்னமும் சொல்ல போனால் சூரியன் மேற்கே உதிக்கும்!! இந்த மாற்றத்தினால் துருவங்களில் உள்ள பனி மலைகள் உருகி நீர் மட்டம் அதிகரித்து நிலப்பரப்பை நீர் உள்வாங்கி கொள்ளும் எனவும் கூற படுகிறது.



மற்றையது, உலகில் பல எரிமலைகள் பூமிக்கடியில் இருக்கின்றன.குறிப்பாக 7. அதில் ஒன்று அமெர்க்காவில் உள்ள "Yellowstone" எனப்படும் எரிமலை. இந்த எரிமலை வெடிக்கும் எனவும், அதில் இருந்து வெளியேறுவன அந்த இடத்தையே நாசம் செய்து மற்றய எரிமலைகளையும் வெடிக்க வைக்கும் எனவும், இதனால் எல்லா இடமுமே அழிந்து போய் விடும் எனவும் கூற படுகிறது.




இன்னமும் பலகாரணங்கள் கூற படுகிறது. சில வற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். மேலே கூறப்பட்டவை எல்லாம் விஞ்ஞான ரீதியில் கூற பட்டவை. இனி மத ரீதியாக நான் அறிந்த அல்லது எனக்கு கூற பட்டவற்றைசொல்லுகிறேன்.

உலகில்உள்ள எல்லா மதமும் சொல்கிறது என்றோ ஒருநாள் உலகம் அழியும் என்று. ஆனால் எந்த மதமும் இந்த நாள்தான் என்று அறுதியிட்டு சொல்ல வில்லை. ஆனால் எந்த சந்தர்ப்பத்தில் அல்லது கால கட்டத்தில் ஏற்படும் என்று கூற பட்டு இருக்கிறது.

இந்து மதம் சொல்கிறது, கலியுகம் முடியும் போது உலகம் அழியும் என்று. இப்போ நடந்து கொண்டு இருப்பது கலியுகம். இந்த யுகம் முடிந்த உடன் நிச்சயம் அது நடக்கும் என்று சொகிறது. இஸ்லாம் சொல்கிறது, அழிவின் அடையாளமாக, சூரியன் மேற்கில் உதிக்கும் எனவும் அதன் பின் அழியும் எனவும் சொல்கிறது. அன்றைய நாள் வெள்ளிக்கிழமை எனவும் சொல்கிறது    ( 21.12.2012 கூட வெள்ளிகிழமைதான்). இதே போல, கிறிஸ்தவ மதமும், யூத மதமும் வேறு மதங்களும் சொல்கின்றன உலக அழிவை பற்றி.






எனது பார்வையில் :- சுனாமி வருது, நில நடுக்கம் வருது என்று சொன்ன மாதிரி இதுவும் வருது, வந்து போகும்.... அவ்வளவே. ஆனால், சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. "மொட்டை" ரசினி சொன்ன மாதிரி, "சாகிற நாள் தெரிந்தால் வாழ்கிற நாள் நரகம் ஆகிடும்" என்ற மாதிரி வாழப்போகும் நாளை நரகம் ஆக்காதீர்கள்!!!  எலே Be Happy :))

25 November 2012

ஜன்னல் ஓரம்

ஒரு அவசர வேலை காரணமாக கண்டி போக வேண்டி இருந்தது. அதனால் அறக்க பறக்க வெளிக்கிட்டு கண்டி போகும் பஸ்சில் ஜன்னல் ஓரம் இருந்தேன். இன்று ஞாயிற்று கிழமை என்ற படியால் பஸ் ஸ்டாண்டில் பெரிதாக சன நடமாட்டம் இல்லை.




பஸ்சுக்குள் அதிகாலை என்ற படியால் இருக்கைக்கு அளவாக பயணிகள் இருந்தார்கள். ஒரு சில இருக்கைகளை தவிர. தண்ணி விப்பவர்க்ளும், வடை போன்ற சிற்றுண்டி விப்பவர்களும் அடிக்கடி வந்து சென்றார்கள். பஸ் புறப்பட சில நொடிகள் இருக்கும் போது பாவாடை, தாவணியில் ஒரு பெண் குலுங்க குலுங்க ஓடி வந்தாள். அந்த அதிகாலை வேளை மெல்லிய சூரிய வெளிச்சத்தில் தேவதை போல தெரிந்தாள் எனக்கு. ஓடி வருவது நான் போகும் பஸ் ஐ நோக்கி. என் மனம் பதை பதைத்தது என் பக்கத்தில் இருப்பாளோ அல்லது வேறு இருக்கையில் அமர்வாளோ என்று. என்னை அதிகம் ஜோசிக்க விடாமல் என் இருக்கை இருக்கும் பக்கம் வந்தாள், இருந்தாள். என்னை ஆசுவாச படுத்தி கொண்டு சிறிது நேரம் இருந்தேன்.

பஸ் புறப்பட தொடங்கியது. ந ந ந ந நா நா ந ந ந என்று என் தொலைபேசி தொல்லை செய்தது. நான் சயிலன்ட் இல் போட்டு விட்டு, என்னை தன் அழகால் கிறங்க வைத்தவளிடம் எப்படி பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தான். மீண்டும் அந்த ந ந ந ந நா நா ந ந ந. மீண்டும் சயிலன்ட்.

சிறிது நேர அமைதியின் பின், எங்கே போறிங்க என்று கேட்டேன். அவளும் கண்டி என்றாள். என்ன விடயமாக போகிறிங்க என்று அடுத்த கேள்வியை கேட்டேன். பேராதெனிய கம்பசில் படிக்கிறாளாம் என்று பதில் சொன்னாள். அவளும் இன்னை பற்றி கேட்டு கொண்டாள். இப்படியே பரஸ்பரம் கதைத்து கொண்டு சென்றோம். என்ன பெயர் என்று பல நிமிடங்களுக்கு பிறகுதான் கேட்டேன். ரூபிகா என்றாள்! மீண்டும் அந்த ந ந ந ந நா நா ந ந ந. மீண்டும் சயிலன்ட்.

இப்படியே கதைத்து கொண்டு இருக்கும் பொழுது உங்க போன் நம்மரை தர முடியுமா என்றேன் ஒரு வித பதை பதைப்புடன். ஜோசித்து விட்டு சரி என்று தன் நம்பரை சொன்னாள்.நான் எனது போனை எடுத்து சேவ்  பண்ண போனேன். அவள் சொன்னாள், 077-57 ந ந ந ந நா நா ந ந ந மீண்டும் அடித்தது என் போன். வாயில் வந்த கேட்ட வார்த்தைகளை அடக்கி கொண்டு போனை என் காதில் வைத்தேன்.

டேய் மூதேவி எங்கடா இருக்கிறாய்??? படம் தொடங்க இன்னமும் 10 நிமிஷம்தான் இருக்கு என்றான் என் நண்பன். சுற்றும் முற்றும் பார்த்தேன் பஸ்சுக்கு பதில் வீடு, இருக்கைக்கு பதில் கட்டில், அவளுக்கு பதில் வீட்டு சுவர். இதோ வாறண்டா என சொல்லி போனை கட் பண்ணி விட்டு, அறக்க பறக்க பாத் ரூம் நோக்கி ஓடினேன்!!!

14 November 2012

துப்பாக்கி

இந்த வருடம் வந்த "சகுனி", "பில்லா", "தாண்டவம்", "மாற்றான்" என எல்லா பெரிய ஹீரோகளுடைய படமும் ஊத்திக்கொண்டு விட்டது (விஜய்+ஷங்கரின் நண்பன் தவிர). இந்த நேரத்தில் பெரிய எதிர் பார்ப்புடன் வந்த படம்தான் "துப்பாக்கி". எதிர் பார்ப்பு என்ன வாகிற்று.....

கதை என்று பார்த்தால் ரொம்ப பழசுதான். தீவிரவாத கும்பலை அடியோடு அழிக்கும் ஹீரோ. அதாவது, விஜய் ஆமியில் இருப்பவர். லீவு காரணமாக சொந்த ஊரான மும்பைக்கு வாறார் அங்கே ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமான ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து கொண்டு எப்படி மற்ற எல்லோரையும் பிடிக்கிறார் என்பதே கதை. ஆனால், அதை சொன்ன விதம் பர பர.. விறு விறு...!!

முருகதாசின் முந்தய படமானா "7ஆம் அறிவு" பெரிதாக பேச படதா காரணத்தினால் இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று திரைக்கதையில் மினக்கட்டு இருக்கிறார். அதற்க்கு பலனும் பெற்று இருக்கிறார். விஜய் "சுறா" எனும் தோல்வி படத்துக்கு பிறகு தனது படங்களை கவனமாக தெரிவு செய்து வருகிறார். காவலனில் இருந்து தெரிகிறது. இதையே தொடர்ந்தால் ஏறுமுகம்தான்.

காஜல் அகர்வால், விஜயுடன் லவ்வுகிறார், ஆடுகிறார், பாடுகிறார் அவ்வளவுதான். சந்தானம், ஜெயராம் எல்லோரும் கொடுத்ததை செய்து இருக்கிறார்கள். ஆனால் நண்பனில் இருந்த வாய்ப்பு இங்கே இல்லை சத்தியனுக்கு. அடுத்து வில்லன், பில்லாவில் வீணடிக்க பட்டவர் இதில் பயன்படுத்த பட்டு இருக்கிறார். இனி இவரை இங்கே பார்க்க முடியும் அதிக படங்களில்.

ஹாரிஸின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது (அரைச்ச மாவு என்றாலும்). அதை எப்படி காட்சி படுத்தி இருப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு இருந்தது அதை இந்தியாவின் முதல் நிலை ஒளிப்பதிவாளரானா சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவுடனும் நடன இயக்குனர்களின் நடன உதவியுடனும் முருகதாஸ் எங்களை ஆட்டம் போட வைக்கிறார். படத்துக்கு படம் விஜய் வயது குறைந்தவராக தெரிகிறார். எப்படிங்ண்ணா???



இடைவேளைக்கு முந்திய அந்த ஆக்க்ஷன் காட்சி மற்றும் நாயின் உதவியுடன் கடத்தியவர்களை கண்டு பிடிக்கும் காட்சி செம. Google Google பாடல் தொடங்கியவுடன் அரங்கமே அதிர தொடங்கியது பலர் எழுந்த ஆடவும் செய்தார்கள். அந்த இறுதி சண்டை காட்சி கில்லியை ஞாபகபடுத்தினாலும் ரசிக்க வைக்கிறார் விஜய் தன் ஸ்டைல் மூலம். அழகாக ஹிந்தியும் பேசுகிறார். ( ஹிந்தி தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும் சரியா பிழையா என்று)

என்னை கேட்டால் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு மாஸ்+கிளாஸ் படம் வந்து இருக்கிறது, வென்று இருக்கிறது. கில்லி, போக்கிரி, துப்பாக்கி எது சிறந்தது என்று கேட்டால், கில்லி, போக்கிரி வரிசையில் துப்பாக்கி என்று சொல்வேன்.



All is Well :))


27 October 2012

பொன்னியின் செல்வன்

எனது வாசிப்பு காமிக்ஸ் புத்தகங்களுடன் மட்டுபடுத்த பட்டு இருந்தது சிறு வயது முதல். சில நேரங்களில் சில சிறு நாவல்களை வாசிக்கும் பழக்கம் உண்டு. காரணம் வாசிப்பதில் உள்ள சோம்பேறித்தனம்!! இருந்தாலும் நான் "பொன்னியின் செல்வன்" வாசிக்க தொடங்கியதன் காரணம், எல்லோரும் ஆகா ஓகோ என்று சொன்னதாலும், பல பேர் அதை திரையில் கொண்டுவர முயற்சி செய்ததும்தான் காரணம். அதனால் வாசிக்க தொடங்கினேன், தொடங்கியது முதல் அதை படித்து முடிக்கும் வரை வேறு நினைப்பு இல்லை. அது ஏன் என்று வசித்தவர்களுக்கு தெரியும், வாசிக்காதவர்கள் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

இன்னமும் என் மனதில் வந்தியத்தவன்,அருள்மொழி வர்மா, ஆதித்த கரிகாலன், குந்தவி, நந்தினி, வானதி, வழுவேட்டயர்கள், ஆழ்வார்கடியான் என பல பேர் உள்ளனர். அந்தளவுக்கு எனை ஆட்கொண்டு விட்டது!


இந்த தொடர் "கல்கி"யில் மூன்று அரை ஆண்டுகள் வந்தது. அதை கிட்டதட்ட ஒருமாசத்தில் வாசித்து முடித்து விட்டேன். இதை முதலிலே முடித்து இருக்க முடியும். T20 உலகக்கிண்ண போட்டி காரணமாக முடியாமல் போய் விட்டது. இதை பல பேர் திரையில் கொண்டுவர முயற்சி செகிறார்கள், ஆனால் அதை அப்படியே கொண்டு வர முடியாது. அப்படி கொண்டு வர வேண்டும் என்றால் "Harry Potter" போல ஒவ்வொரு பாகமா எடுக்க வேண்டும். அது தமிழில் முடியாத காரணம். முக்கிய சில விடயங்களை தொகுத்து ஒரு நல்ல திரைக்கதை மூலம் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கலாம். இதை திரையில் கொண்டு வர எதிர்ப்பதன் காரணம் உண்மைதமையை சிதைத்து விடுவார்கள் என்றுதான், ஆனாலும் இதை வாசிக்கும் நிலையில் பல பேர் இல்லை, வசதியும் இல்லை, ஆகவே திரையில் கொண்டுவந்தால் ஓரளவுக்கு ஏனும் இதை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். நானும் திரையில் காண ஆவலுடன் உள்ளேன்!!

14 October 2012

மாற்றான்

சில படங்களை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றும். அப்படி தோன்றி பார்த்த படம்தான் இது. காரணம் அயன் கூட்டணி மீண்டும். ஆனால் வலைப்பதிவுகளிலும், த்விட்டேரிலும் கடுமையாக விமர்சிக்க பட்ட/படுகிற படம் என்பதால் எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாமல் சென்றேன். அதனாலோ என்னவோ இந்த படம் எனக்கு பிடித்து கொண்டது. சரி இந்த படத்தின் கதை என்ன வென்று பார்த்தால்,

சூர்யாவின் அப்பா(சச்சின்) ஒரு விஞ்ஞானி, அவர் செய்யும் பரிசோதனை முயற்ச்சியில் ஒட்டி பிறக்கும் குழந்தைகள்தான் சூர்யா+சூர்யா. சச்சின், சிறு பிள்ளைகளுக்கான பால் பவுடர் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார் ஆனால் மற்ற கம்பனிகளை விட இவர் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்து விடுகிறார். அதை அழிக்க சில சக்திகள் முயலுகின்றன. யார் அதை அழிக்க முயலுவது, ஏன் அழிக்க முயலுவது, உண்மையான குற்றவாளி யார்  என்பதை சொல்கிறது படம்.

படம் பார்த்து கொஞ்ச நேரத்திலேயே யார் உண்மையான குற்றவாளி என்பதை அறிந்து கொள்கமுடிகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை சில காட்ச்சிகளில் ஊகிக்க முடிகிறது. பாடல்களின் இசையை போலவும் பின்னணி இசையும் பெரிதாக எடுபட வில்லை. இரு பாடல்களை தவிர. "நாணி கோணி" பாடலின் லொக்கேஷன் சுப்பர். வழமை போல சூர்யா நடிப்பில் அசத்தி இருக்கிறார். (கஜால்)ஒருவரை காதலித்து, அவர் இறந்ததும் மற்றவரை காதலிப்பது என்பது ஆங்கில படங்களில் கூட வந்து இருக்குமோ தெரியா வில்லை. தமிழில் புரச்சி செய்கிறேன் என்று நினைப்பு போல. கஜாலின் கேரக்டர் முக்கியம் என்றாலும் அவருக்கு நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை! இடை வேளையின் பின் ரஷியன் மொழியில் கதைக்கும் போது அப்படியே தமிழில் மொழி பெயர்ப்பது என்பது இரண்டும் கேட்டான் நிலை.


இவ்வளவு ஓட்டை இருந்தும் பிடித்து இருக்கிறது என்றால், பார்க்கும் போது எந்த வித சோர்வையும் தராமல் இருப்பதே காரணம். இவர் எடுத்தது காவிய படமோ அல்ல விருத்துக்கோ அல்லவே!! ஒரு ஹை டெக் மசாலா படம். இங்கு ஓட்டையும் இருக்கும் எல்லாம் இருக்கும். சந்தோசமாக பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம்!!!







இந்த படத்தில் டானியல்  பாலாஜி, "பச்சைக்கிளி முத்துச்சரம்" வில்லன் எல்லோரும் நடிப்பதாக இருந்தது ஆனால் இந்த படத்தில் இல்லை. "Stuck On You" படம் என்று சொன்ன படியால் கதையை அப்படியே மாற்றி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

06 October 2012

தீவு VS தீவுகள்

கிரிக்கெட் ரசிகர்களிடையே சில தொடர்கள் அதிக எதிர் பார்ப்பை ஏற்றி விடும். அந்த வகையில் உலக கிண்ணமும் ஒன்று ஆனால் இது இருபதுக்கு இருபது தொடர். நடப்பது இலங்கையில்.கடந்த இரு வாரங்களாக கதைக்கபட்ட, பார்க்கபட்ட தொடர் நாளைய இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற இருக்கிறது. இந்த முறை போட்டியை நடத்தும் இலங்கை அணியும் கரிபியன் தீவுகள் என அழைக்கப்படும் மேற்கிந்திய அணியும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.



இலங்கை அணியை பொறுத்த வரை, சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் விளையாட போகிறது. அத்துடன் பலம் கொண்ட துடுப்பாட்ட வரிசையையும் பந்து வீச்சையும் தன்னகத்தே வைத்துள்ளது. இலங்கை அணியின் பலமே சுழல் பந்து வீச்சில் இருக்கிறது. அவர்கள் ஓட்டத்தை கட்டுபடுத்துவதுடன் விக்கட்டுகளையும் எடுக்கத்தவருவதில்லை. அதே போல வேக்கப்பந்து வீச்சாளர்களும் தங்கள பணியை திறம்பட செய்கிறார்கள்.

மேற்கிந்திய அணியும் அதே போல துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அவர்களின் பலமே Gayle எனும் தனிமனிதன்தான். அவர் நின்று அடித்து ஆடினார் என்றால் பின் வருவோர்களும் அந்த பணியை செய்வன செய்வார்கள்.

இரு அணிகளும் முதன் முறையாக T20 போட்டியின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருக்கிறார்கள். இலங்கை அணி Gayle லை சுப்பர் 8 போட்டியில் வீழ்த்தியது போல் வீழ்த்தினால் மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை மஹாலே சொன்ன "நாங்கள் அவரை பற்றி கவலை பட வில்லை" என்று சொல்வதிலேயே இருக்கிறது!! அவரின் பெயரை குறிப்பிட்டு சொல்கிறளவுக்குஒரு பீதியை கிளப்பி இருக்கிறார் அரை இறுதியில் அவுஸ்திரலியாவுக்கு எதிராக ஆடிய ருத்திர தாண்டவத்தின் மூலம்.





இலங்கை அணியில் ஆரம்ப துட்டுப்பட்ட வீரர்கள் சிறப்பான ஒரு அடித்தளத்தை இட்டு கொடுத்தார்கலேயாயின் நிச்சயமாக எதிர் அணியினருக்கு சவாலாகா இருக்கும். பாகிஸ்தானுடன் நடந்த அரை இறுதிப்போடியில் மலிங்க ரொம்பவும் சோர்வாகவும் ஒரு வித பயத்துடனும் காணப்பட்டார். அதைக் களைந்து விளயாடுவாராயின் எதிர் அணிக்கு அவரும் சவால் விடுவார் தனது பந்து வீச்சின் மூலம்.

Gayle எனும் போர் வீரன் போர்க்களம் எனும் மைதானத்தில் நின்றால் எதிரிக்கு மரண பயம்தான். அவருடன் Pollard டும் சேர்ந்தான் வான வேடிக்கைதான். ராம்போல் மற்றும் நாரைனே பந்து வீச்சில் கலக்குகிறார்கள்.






      
 
பார்ப்போம் நாளைக்கு தீவுகளா அல்லது தீவா கிண்ணத்தை "முதன் முறையாக" எனும் சொல்பதத்துடன் வெல்கிறது என்று!!



15 August 2012

Orange - தெலுங்கு திரை விமர்சனம்

நான் தெலுங்கு படங்களையும் பார்ப்பேன் சில நேரங்களில். இந்த படத்தை நான் பார்க்க 2 காரணங்கள் உண்டு. ஒன்று ஹாரிஸ் ஜெயராஜ் மற்றது ராம் சரண் தேஜா. ஏன் என்றால் ஹரிஷின் இசை. கேட்க்கும் போதே நன்றாக இருந்தது (கேட்ட பாடல்கள்(இசை)தான்), மற்றது ராம் சரண்; அவரின் மஹாதீர(மாவீரன்) பார்த்தேன் அதனால் அவர் நடித்து வந்த அடுத்த படமான இதன் மேல் உள்ள எதிர்பார்ப்பு.  இந்த படம் 2010 ஆம் ஆண்டு வந்தது ஆனால் டவுன்லோட் செய்தது இந்த ஆண்டுதான் அதுவும் பல மாதங்களின் பின் நேற்றுதான் பார்க்க கிடைத்தது!!


படத்தின் கதை என்று பார்த்தால், இவர் அவுஸ்திரலியாவில் அவரின் அக்காவுடன் வசித்து வருகிறார். படம் தொடங்கும் போதே "எங்கள் காதலை நாங்கள் முறித்து கொள்வோம், நீ ஒரு சைக்கோ" என்று கமராவை(ஹீரோயினை) பார்த்து சொல்கிறார். அது யார், ஏன் என்பதை பிளாஷ்பக் மூலம் சொல்கிறார். அவர் படிக்கும் போதே டீச்சருக்கே "லவ் யு" சொன்னவர். இப்படி வாழ்கையில் ஒன்பது பெண்களை லவ் பண்ணி கை கழுவி விடுகிறார்!! இப்போ அந்த லூசு(அதுதான் ஹீரோயின்-பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்) வருகிறது . ராம் சரணுக்கு அவர் மீது  லவ் வருவதாக ஒரு சீன் அதுவும் முதல் சீன். என்ன கொடுமை; அரண்டுகொண்டு, விரண்டு கொண்டு. சொல்ல மறந்திட்டேன் ஹீரோயின் ஜெனிலியா; அப்போ சரிதான்!! பிறகு காலேஜ் போகும் போது அங்கு கோல்ப் விளையாட தெரியும் என்பதற்காக ஒருவனையும், சிங்க ஜோர்க் சொல்வான் என்பதற்காக ஒருவனையும், ஷாபி யாக இருக்கிறான் என்பதற்காக ஒருவனையும் இது லவ் பண்ணுது??? அந்த மூன்று பெரும் ஒரே நேரத்தில் dating போக கூப்பிடுகிறார்கள். அதனால் இது குலுக்கல் முறையில்  ஒருவரை தெரிவு செய்ய முடிவு பண்ணது. அந்த நேரத்தில் நம்ம ஹீரோவும் வாறார், வந்து தானும் உன்னை லவ் பண்ணுகிறான் என்று சொல்லி அவர் பெயரையும் எழுதி போடுகிறார்.


பிறகு இவர் அவரின் பின்னால் சுத்துகிறார். ஒரு நிறத்தில் வில்லன்களிடம் இருந்த அவரை காப்பாற்றுகிறார் அதனால் இதுக்கு அவர் மேல் லவ் வந்திடுது. ஒரு கட்டத்தில் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை முழுவதும் காதலிக்க மாட்டேன் என்று. அதனால் ஜெனிலியாவும் குழம்புது நானும் குழம்பிட்டேன்!! அதனால் ஜெனிலியாவுக்கு வேறு திருமணம் பார் படுகிறது. அங்கே வந்து ஜெனிலியாவின் மண்டையை காய வைத்து அந்த கல்யாணத்தை நிறுத்துகிறார். ஆனாலும் சொல்கிறார் நான் உன்னை வாழ்க்கை பூராக காதலிக்க மாட்டேன் என்று. அது ஏன் என்றால், அவர் இந்தியாவில் இருக்கும் போது "ரூபா" என்ற பெண்ணை லவ் பண்ணுகிறார். அவரிடம் உண்மையாக இருக்கிறார் அதனால் அவர்களுக்கு இடையில் மனஸ்தாபம் வருகிறது அதனால் இவர் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் சந்தோசமாக இருக்கிறது இப்போ. ஆனால் இவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது. அதனால் அந்த காதலையும் முறித்து கொள்கிறார். அத்தோடு காதலிக்கும் போது எப்படி ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருகிறார்களோ(இருந்தால்) அதே மாதிரி கல்யாணத்துக்கு பிறகும் இருக்க மாட்டார்கள் என்கிறார். அதனால்தான், நான் யாரையும் வாழ்க்கை முழுவதும் லவ் பண்ண மாட்டேன் என்கிறார்.



ஆனால் சரண் , ஜெனிலியாவை லவ் பண்ணுகிறார். சரணின் முக்கியமான பொழுது போக்கு, சுவர்களில் படம் வரைவது. அது அவருக்கு பிடிக்க வில்லை. அதனால் அவர் சொல்கிறார் நீ அதை விட்டு விட்டு என்னை வாழ்க்கை முழுவது காதலிப்பதாக இருந்தால் வா என்கிறார். கடைசியில், தன் காதலு(லி)க்காக தன் கொள்கையை மாற்றினாரா அல்லது அதே கொள்கையுடன் இருந்து அவரை பிரிந்தார என்பதுதான் கிளைமாக்ஸ்!!


 

உண்மையில் இந்த படம் பெரிதாக ஓட வில்லை. காரணம், கதை சொன்ன விதம், ஜெனிலியாவின் கதாப்பாத்திரம்(எத்தனை படங்களில்தான் ஒரே மாதிரி ரசிப்பது), எந்த வித விறு விறுப்பும்  இல்லாமல் கதை நகர்கிறது. இருந்தாலும் சொல்ல வந்த விடயம் நல்லது. அதாவது, இந்த காலத்தில் உண்மை காதலை யாரும் ஏற்பது இல்லை; அதற்க்கு இருபாலரும் காரணம். எல்லோரும் பொய்யாகவே காதலிக்கிறார்கள் அதையே இருபாலரும் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது படம்.


இந்த படத்தில் நான் ரசித்த விடயங்கள் என்றால், பாடல்கள்(கேட்டு பழகியவைதான்), ஒளிப்பதிவு, மற்றது வழமை போல பிரம்மானந்தம்!! வீட்டில் இருந்து பார்த்த படியால் போர் அடிக்காமல் பார்த்தேன் .


லவ் பண்ணுங்க ஆனால் உண்மையாக இல்லாமல் :))

12 August 2012

நீயும் என் தோழனே – சேகுவாரா

அறிந்தோ அறியாமலோ நான் இவர் பால் ஈர்க்க பட்டேன். ஒரு வேலை நான் வாழ்ந்த சூழல்தான் காரணமா தெரிய வில்லை?? இருந்தாலும் இவரை பற்றி என் ப்ளாக் கில் போட வேணும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். இன்று அது சாத்தியம் ஆகிற்று!!



உறுதியான, அழகான முகம், சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சடை, பூட்சுகளும், கருப்பு தொப்பியும் அதில் சிவப்பு நட்சத்திரமும் அவரோடு ஒட்டி பிறந்த அம்சங்கள் போல தோன்றின. யார் இவர்? இவர்தான் பல புரட்சிகளை உருவாக்கியவர். உலகெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்து, திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய ஏதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது.
அவர்தான் சே குவாரா அல்லது சே என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவாரா. 1928 ஜூன் 14-ஆம் நாள், அர்ஜெண்டினா ரோசாரியோவில் பிறந்த சே, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்த்துமா நோயால் அவதி பட்டாலும், உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டார். 1952-இல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவரான இவர், பிற்காலத்தில் இலட்சிய வீரர் என்று உலகளவில் பேரெடுத்தார். மாணவர் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

பட்டம் பெற்ற பிறகு, தனது மோட்டார் சைக்கிளிலேயே குவாதமாலாவிற்கு சென்று, அங்கு கம்யூனிச ஆதரவாளராகிய ஜெக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில் (1951-54), அரசாங்க மருத்துவ சேவகனாக பணிபுரிந்தார். அதோடு அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அர்பென்ஸ் ஆட்சி வீழ்ந்த பிறகு, சேகுவாரா மொக்சிகோவிற்கு சென்று, மார்க்சிஸ்ட் பாப்புலர் சோசலீஸ்ட் கட்சித் தலைவர் வின்செண்ட் லொம்பர்டொவுடன் தொடர்பு கொண்டார். அங்கு சேவிற்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர், மற்றும் தேசிய பல்கலைகழக மருத்துவ ஆசிரியர் என்று இரண்டு பொருப்புகள் கொடுக்கப்பட்டது.
1956-இல், சே, காஸ்ட்ரோவை எதெச்சையாக சந்தித்தார். காஸ்ட்ரோவின் கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்டசேகுவாரா, மருத்துவ சேவையின் பேரில் அப்படையில் இணைந்தார். ஜூலை 1956-இல், மெக்ஸிகன் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட சேகுவாராவும், தோழர்களும் விடுவிக்கப்பட்டபின், டிசம்பர் 1956-இல் கிரான்மா இலட்சியப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு போராளியாகவும், பின் இராணூவ தளபதியாகவும், அதன் பின் கமாண்டராகவும், காஸ்ட்ரோவிற்கு அடுத்த மனிதராகவும் இருந்த மனிதராகவும் இருந்த சேகுவாராவின் தலைமையில் 1958-இல் சாந்தா கிளாராவை கைப்பற்றினார்கள். 1959 கியூபா புரட்சிக்குப்பின், சேவிற்கு கியூபா குடியுரிமை அளிக்கப்பட்டதோடு, ஹவானாவில் லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தார். பிறகு இராணூவ உத்தரவு பிறப்பிற்கும் துறையின் தலைவராக இருந்து கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வந்தார்.
அதைத் தொடர்ந்து, தொழிற்துறை தலைவராகவும், பின் தேசிய வங்கியின் தலைவராகவும், 1961-இல் வர்த்தக அமைச்சராகவும் பதவியேற்றார். தேசியமாக்குவதில் கவனம் செலுத்தி, இறக்குமதிகளைக் குறைத்து, தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார். கியூபாவின் பொருளாதாரம் வெகுவாக மேம்பாட்டைக் கண்டது. இராணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா இராணுவ உடையில், நட்சத்திரம் கொண்ட தொப்பியில், புரட்சிகரமான எழுத்துகளை பிறருக்கும் வாசித்து காட்டும் அந்த காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.
சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக் கொன்றது அமெரிக்க தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும், அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துக்கொண்டே இருக்கிறார்.
சே குவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான்.
சேகுவாரா இவன் வாழ்க்கை ஏடுகளை படித்தால், படிப்போர் இதயங்களில் போராட்ட குணங்களை விதைப்பான். மருத்துவனான இவன் மனதில் மக்கள் விடிவுக்கு, சமூக மருந்து எது? என்ற கேள்வி எழுந்தது.
பணக்காரர்களுக்கு மருந்தும் மருத்துவ வசதிகளும் பரவலாக கிடைக்கிறது. ஏழைக்கோ, அது ஏன் எட்டாக் கனியாகிறது? ஏழைகள் என்ன மரண தண்டனைக் கைதிகளா?
எதிரிகள் யார் என ஆராய ஆரம்பித்தான். ஓரே சமுதாயத்தில் ஏன் ஏற்ற தாழ்வு? ஆட்சி முறையின் கேடா? சமுதாய அமைப்பு முறையில் கேடா?
உழைக்கும் வர்கத்துக்கு இந்த உலகமே உயில்! என்று எழுதிய நம் பாட்டன், கார்ல் மார்க்ஸ் சொன்ன புத்தியை புத்தகத்தில் படித்தான். அது புதிராக இருந்தது. புரிய தொடங்கியது. புத்தி அது பொழிவடைந்தது.
உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்க்கம் , உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்க்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.
வர்க போருக்கு வக்காலத்து வாங்க துணிந்தான் வக்கீலாய் வந்த பிடேல் காஸ்த்ரோவோடு இணைந்தான். சொர்க பூமியை சொர்ப்ப பூமியாக்கிக் கொண்டிருக்கும் பத்திஸ்தாவின் கொடுங்கோலை எதிர்த்து, அமேரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்ட முடிவு செய்தனர்.
ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன், ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.
கியூபா மக்கள் விடியலுக்காக சிறிய படையோடு சீரிபாய்ந்து களம்
இறங்கினார். போராட்டத்தில் மக்களின் ஆதரவை வென்றனர், கியூபாவில் புரட்சி செய்தனர், அதில் வெற்றி கொண்டனர். அமெரிக்க குள்ள நரிகளையும். முதலாளித்துவ ஓநாய்களையும் விரட்டியடித்தனர்.
கியூபா புரட்சி மட்டும் போதுமா? கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் எல்லை போடனுமா? காஸ்த்ரோ கியூபாவை வழிநடத்தட்டும். தன் வழி உலக வழி. ஒரு புரட்சி போதுமா உலகம் மாற? ஒவ்வொன்றாய் வெடிக்கட்டும் புரட்சிகள் ஆயிரம். மக்கள் தான் விடுதலையின் விழுதுகள். அடிமை சங்கிலியை அருத்தெடுத்து விடியலை வீதிக்கு கொண்டுவரும் விடிவெள்ளி.
எங்கெல்லாம் மக்கள் அடிமைபட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி வீரன் உருவாக வேண்டும்.
சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது…
"சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"
இன்றும் சே போராடும் ஒவ்வோரு இளைஞனின் இதயத்தில் புரட்சி விதையாய் முளைக்கிறான்.
சே காங்கோவிற்கு புறப்பட்டான். போராடும் போதனைகள் அங்கே போதவில்லை. மீண்டும் கியூபாவிற்கு வந்து புரட்சியை உலகிற்கு கொண்டு சொல்ல முற்பட்டான்.
போலி வேடத்தில் பொலிவியா காட்டிற்கு புகுந்தான். புரட்சி படை அமைத்தான். கொரில்லா போரை துவங்கினான். அமெரிக்கா இவனை அழித்துவிட கங்கனம் கட்டியிருந்தது.
கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது. சேகுவாராவை விடிய விடிய தேடியது. பொலிவிய இராணுவத்தின் உதவியோடு சேகுவாராவை உயிரோடு பிடித்தது. மறுநாள் உயிரை உடலிலிருந்து பிரித்தது. இறந்தான் சே என முதலாளித்துவம் இன்புற்றது. இணையில்லா புரட்சிவீரன் இறந்துவிட்டானா என்று மக்கள் உறைந்து போனார்கள்.
அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா.

நன்றி:விக்னேஸ்வரன்
 

06 August 2012

உங்களுக்கு தெரியுமா


 பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாட்டிகன் சிட்டி

உலகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்

வருடம் தோறும் பூமில் புதைந்து வரும் நாடு - நெதர்லாந்து

டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ

கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்

படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்

வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து

உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து

நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்

தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா

உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு

உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே

உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே

ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )

ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா

பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்

தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்

ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா


உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - thorth

உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே (தென்அமெரிக்கா )

பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

சத்தில்லாத உணவு - நீர்

கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 (தாயகம் - மெச்சிக்கோ)

அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - Fido

கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்

ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா

திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா
 

23 July 2012

மாற்றான் படத்தின் கதை என்ன


தமிழ் சினிமாவில் ஒரு படம் வரும் பொழுது அது இந்த படத்தின் தழுவலாக இருக்குமோ, அந்த படத்தின் தழுவலாக இருக்குமோ என்று எல்லாம் இணையத்தளத்திலும் பத்திரிகைகளிலும் அலசி ஆராய்வார்கள். இந்த முறை கைகளில் சிக்கி இருப்பது "மாற்றான்". அது எந்த படத்தின் தழுவலாக இருக்கும் என்பதை படம் வந்த பிறகுதான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் K .V.ஆனந்த் சொல்வது போல் தழுவல் அல்லாமலும் இருக்கலாம். இங்கே ஆராய பட இருப்பது இரண்டு படங்களை பற்றி; Stuck on you(2003) & Alone(2007)


Stuck on you படத்தின் கதை என்ன ?

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் "பாப்" Normal Type. "வால்ட்" Causual Tpye. இருவரும் ரெஸ்டாரண்ட் நடத்திவருகிறார்கள். கஸ்டமர் ஆர்டரை ரெண்டே நிமிஷத்தில் ரெண்டு பேரும் செய்துதரும் ஸ்டைலுக்காகவே இந்தக் கடையில் சாப்பிட கூட்டம் கூடும்.

தன்னுடன் ஒட்டிப்பிறந்த வால்ட் இருப்பதை சொல்லாமலே ’மேபாங்’ என்ற பெண்ணுடன் Letter மூலம் காதலாகிறான் பாப். வால்ட்டுக்கு ஹாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை. இதற்கு வேண்டா வெறுப்பாக பாப் சம்மதிக்க கலிபோர்னியாவில் குடியேறுகிறார்கள். ஹாலிவுட் வாய்ப்பு தேடுகிறான் வால்ட். புளூஃபிலிமில் நடிக்கிறாயா? என ஏராள வாய்ப்புகள் வர அதை ஏற்காமல் முயற்சிக்கிறான். பாப் மண்டைக்காய்வதை பார்த்த வால்ட் பாப்பிற்கு தெரியாமலேயே அவனுடைய காதலியை சர்ப்ரைஸாக வரவைக்கிறான் வால்ட்.


ஒருநாள் பாப்பும் வால்ட்டும் ஒன்றாக படுக்கையில் இருக்க... ‘நீ ஒரு ஹோமோசெக்ஸ் பேர்வழி’ என சண்டை போட்டுவிட்டு ’ஒட்டிப்பிறந்தவர்கள்’ என்கிற விளக்கத்தை ஏற்காமல் போய்விடுகிறாள்!

டிவி தொடரில் வால்ட் புகழ்பெறுவதுடன் அவர்கள் "Conjoined Twins" என்கிற செய்தி மீடியாவில் வர உண்மையறிந்த காதலி திரும்பி வந்து ‘நான் உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன்’ என்கிறாள். பிரச்சனை வேண்டாம் இருவரும் ஆபரேஷன் மூலம் தனியாகிவிடுவோம் என பாப்பின் எதிர்ப்பை மீறி வால்ட் முடிவுசெய்கிறான். 

ஆபரேஷன் சக்சஸ். வால்ட் ஹாலிவுட்டில் வாய்ப்புதேட, பாப் ஊர் திரும்பி ரெஸ்டாரெண்ட் நடத்துகிறான்.ஆனால் ஒட்டியிருந்த போது வால்ட்டுக்கு இருந்த நடிப்புத்திறமை இப்போது இல்லை. பாப்பிற்கும் ஓட்டல் வேலையில் சுறுசுறுப்பு இல்லை. 

வால்ட் ஊர்திரும்பி பாப்புடன் ஓட்டலில் பணி செய்கிறான். ஆனால் இரட்டையராக அவர்கள் இருந்தது தான் கஸ்டமர்களை கவர்ந்த விஷயம். அதனால் கூட்டம் குறைய விசேஷ உடை ஒன்றை தயாரித்து அணிந்து கொண்டு ஒட்டிய பிறவிகளாகவே மாறிவிட வாழ்க்கையும் வியாபாரமும் களைகட்டுகிறது.

நகைச்சுவை உணர்ச்சியோடு எடுக்கப்பட்ட இந்த படத்தைத்தான் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஆக்‌ஷன் ஃபார்முலாவுக்கு ஏற்ப ‘மாற்றான்’ ஆக்கியிருக்கிறார்கள் என்று பேசிக்கிறாங்க. அதில் இரு நடிகர்கள் சோல்டர் ஒட்டியது போல நடித்தார்கள். இதில் சூர்யா ஒருவரே நடித்திருப்பது வியப்பு!


Alone படத்தின் கதை என்ன ?

ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளில் ‘பிம்’ சாந்தமானவள். ‘பிலாய்’ முசுடு. ‘வீ’ எனும் இளைஞனை இந்த சகோதரிகள் சந்திக்கையில் ‘பிம்’ மை அவன் விரும்புகிறான். ‘பிம்’முக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் நானும் அவனை லவ் பண்றேன்  என பிலாய் பிரச்சனை பண்ண....  
ஒரு கட்டத்தில் இருவரும் ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரிய முடிவுசெய்கிறார்கள்.
ஆபரேஷன் மூலம் பிரிக்கிற போது ‘பிலாய்’ இறாந்துவிடுகிறாள். ’பிம்’மும், ’வீ’ யும் தாய்லாந்தை விட்டு வெளியேறி தென்கொரியாவில் வசிக்கிறார்கள். ‘உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என ஒருநாள் பிம்முக்கு போன்வர... ’வீ’யுடன் கிளம்பி வருகிறாள். அம்மாவின் இறுதிச்சடங்குகள் முடிந்து அன்று தன் வீட்டில் பிம் தங்க இறந்து போன பிலாயின் ஆவி பிம்மை துவம்சம் செய்கிறது! 

"மாற்றான்" படம் "அலோன்" படத்தின் கதை தானே? என மீடியாக்கள் டைரக்டர் கே.வி.ஆனந்தை கேள்வியால் துளைக்க!! மிகத்தெளிவாகவும், அழுத்தமாகவும் தன் பதிலைச் சொன்னார் கே.வி.ஆனந்த்.

இது "அலோன்" படத்தின் கதை இல்லை. அந்தப்படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இப்படி ஒரு சர்ச்சை கிளம்பிய பிறகு தான் "அலோன்" படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு. புத்தகம் ஒன்றில் தாய்லாந்து நாட்டில் பிறந்த கன்ஜாய்ண்டு ட்வின்ஸ் பற்றி படித்ததன் பாதிப்பு தான் "மாற்றான்" என விளக்கமாகச் சொன்னார் கே.வி.ஆனந்த்




இதே நேரத்தில் பிரியாமணியும் "சாருலதா" என்கிற படத்தில் நடிக்கிறார். அது "Alone" படத்தின் தழுவல் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள். இருந்தாலும் இந்தியாவில் வரும் (சாருலதா முதலில் வரா விட்டல்) Conjoined Twins படம் என்கிற பெருமையை பெரும்; அதே நேரத்தில் சூர்யாவின் கடின உழைப்பும் ஆனந்தின் கடின உழைப்பும் நிச்சயாமாக ரசிக்கபடும் என்று நம்புகிறோம். "கோ" படமும் ஒரு தழுவல் படம். என்றாலும் அது சுப்பர் ஹிட் ஆனது. எனக்கு என்னவோ படத்தின் கதை "Alone" படத்தின் தழுவலாகவும் சில காட்ச்சிகள் "Stuck on you" படத்தின் நகலாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போம் மாற்றான் "அசலா" "நகலா" என்று!!
 


22 July 2012

தலைவன்

இந்த பெயரை பார்த்தவுடன் நீங்கள் நினைத்தி இருப்பீர்கள் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவன் படத்தை பற்றிய முன்னோட்டமாக இருக்கும் என்று. இது இப்போ வாழும் மிகவும் எளிமையனா ஒரு தலைவன் பற்றியது. இது சுவாரசியமான அதே நேரத்தில் ஜோசிக்க வேண்டிய விடயமும் கூட. அதனால்தான் நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இரானிய ஜனாதிபதி "மஹ்மூத் அஹ்மேடினஜாத்" தான் அவர்,



1. அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது.

2. அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில்தான்.

3. இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே.

4. படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD.
  (PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology)

5. இவரது வங்கி நிலுவை 0

6. இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும். தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்.

7. அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8. பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்.

9. பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10. தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான
திரைச்சீலைகளை
ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்.

11. நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம்.
 



இருக்காங்களே நம்ம நாட்டு தலைவர்கள்.....
இனி எதிர்காலத்திலாவது இது போன்ற நல்ல தலைவர்கள் வர பிராத்திப்போமாக !!!

20 July 2012

மீண்டும் ஒரு யுத்தம்...இந்தியா எதிர் இலங்கை

மறுபடியும் தோணியின் தலைமையில் இந்திய அணி  இங்கு வந்துள்ளது.
இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக இங்கு வந்து விளையாடி கிண்ணத்தையும் வென்று சென்று இருக்கிறது. ஆனால் நன்கு பழக்க பட்ட மைதானங்களில் மாத்திரமே விளையாடி உள்ளது. இந்த முறை முற்றிலும் பழக்க மில்லாத இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மைதானத்தில் விளையாட உள்ளது(இரண்டு போட்டி) அத்துடன் பல்லேகலயிலும் ஒரு போட்டி உள்ளது மிகுதி இரு போட்டியும் நன்கு பழக்க பட்ட கொழும்பில் விளையாட உள்ளது.

இலங்கை அணியை பொறுத்த வரை, தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறது மற்றும் விளையாட இருக்கிறது. அவர்களின் மிக பெரிய பலம் என்றால் சொந்த மைதானத்தில் விளையாடுவது என்பதுதான். அத்தோடு, பாகிஸ்தான் அணியுடனான வெற்றி இன்னும் தென்பை தரும். அணியில் உள்ள சிரேஷ்ட வீரகளுடன் இளம் வீர்களும் கலக்குகிறார்கள். முக்கியமாக மகெல மற்றும் சங்க நல்ல போர்மில் இருக்கிறார்கள். அந்த நிலை தொடர்ந்தால் இதிலும் வெற்றி வாகை சூடலாம்.

இந்திய அணியை பொறுத்த வரை, அவர்கள் தொடர்ந்து ஆறு வாரமாக ஓய்வில் இருக்கிறார்கள். அது சில நேரங்களில் பலமாகவும் சில நேரங்களில் பலவீனமாகவும் போகலாம். இந்திய அணிக்கு உள்ள பெரிய பலவீனமே அதன் பந்து வீச்சுதான். ஜாகிர்கான் மற்றும் யாதவின் பந்து வீச்சு  சிறப்பாக இருந்தால் இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கலாம். ஏன் என்றால் இந்திய அணியின் துடுப்பாட்டம் வழமை போல் பலமாக உள்ளது. சேவாக், காம்பிர், தோணி, ரைனா, கோலி,  ஷர்மா மற்றும் பதான் உள்ளார்கள்.



இதுவரை இந்திய அணி இங்கு 76 போட்டிகளில் விளையாடி 34 இல் வெற்றியும் 33 இல் தோல்வியும் அடைந்து உள்ளது. ஆக, இரு அணிகளும் சம வெற்றி தோல்விகளுடன் உள்ளது. ஆனால் இறுதியாக 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற போட்டியில் 3-2 என்ற அடிபடையில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடந்த 5 போட்டிகளில் இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வென்று உள்ளது. நாளை முதல் போட்டி அம்பாந்தோட்டையில் தொடங்க உள்ளது. பார்ப்போம் தோணியின் தலைமையில் இந்திய அணி சிங்கத்தை வீழ்த்துகிறதா அல்லது வீழ்கிறதா என்று.
 




15 July 2012

பில்லா - வேணாம், வலிக்குது, அழுதிடுவேன்


   
சில பல காரணங்களால் முதலிலேயே பார்த்த படத்தை பற்றி எழுத முடிய வில்லை. இருந்தாலும் படம் எப்படி என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். 

ஒரு படத்துக்கு ஓவர் எதிர் பார்ப்பு ஆகாது என்பதை 7ஆம் அறிவுக்கு பிறகு மீண்டும் நிருபித்து இருக்கும் படம். அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்று நினைத்தாரோ தெரிய வில்லை இயக்குனர். அப்படி ஒரு கொலை வெறி தாக்குதல் எங்கள் மீது.  

கதை என்று பார்த்தால், இலங்கையில் இருந்து அகதியாக மண்டபத்துக்கு போகிறார். அங்கு ஒரு வலது குறைந்த ஆளை அடிப்பதுடன் தொடங்குகிறது அவரின் டான் வாழ்க்கை. அடி வாங்கியவர் வில்லனுடன்(பல வில்லன்கள் உண்டு) கூட்டு சேர்ந்து கொண்டு இவரையும் இவர் நண்பரையும்(பில்லா வில் அஜித்தின் நண்பராக வரும் ரஞ்சித்)  அனுப்புகிறார்கள். அதில் வைரங்கள் இருக்கிறது என்று தெரியாமலே போகிறார்கள். போலீஸ் செக் பண்ணும் போதுதான் தெரிய வருகிறது இதில் வைரங்கள் இருக்கிறது என்று. போலீஸ் எல்லோரையும் போட்டு தள்ளி விட்டு வைரங்களை நேர்மையாக அண்ணாச்சியிடம் ஒப்படைக்கிறார்கள். இவர்களின் நேர்மையை பார்த்த அண்ணாச்சி இவர்களுக்கு வேலை கொடுக்கிறார். பிறகு எப்படி டேவிட் பில்லா எப்படி டான் ஆனான் என்பதை DVD யில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் படத்தில் நான் ரசித்த விடயங்கள், படத்தில் வரும் locations , ராஜசேகரின் ஒளிப்பதிவு, புருன அப்துல்லாவின் கவர்ச்சி, இரா.முருகனின் வசனங்கள். வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

ரொம்ப அழ வைத்த விடயம், 5க்கும் 10க்கும் அல்லாடி கொண்டு இருப்பவர் போடும் சூ வை பாருங்கள். Machine Gunனால் வில்லன்களில் ஆட்கள் சுடுகிறார்கள் இவர் Shotgunனால் சுடுகிறார். அவர்கள் பட பட என சுடும் ஒன்றும் பட வில்லை இவர் டோப்பு டோப்பு என்று சுடும் ஒவ்வொன்றும் படுகிறது. தலையில் அடி பட்டு மாடி படியில் இருந்து  கீழ் விழுந்து ஏதோ கட்டிலில் இருந்து எழும்பியவர் மாதிரி எழுந்து அடியாட்களின் கதையை முடிக்கிறார். இன்னொரு வில்லன் ஜெட் லீ மாதிரி அவரின் ஆரம்ப காட்ச்சியில் தூள் பின்னுகிறார் ஆனால் கடைசியில் வடிவேலு மாதிரி அடி வாங்கி சாகிறார். அந்த ஆயுத Factoryக்கு எந்த வித எதிர்ப்பு இல்லாமல் சும்மா Tea குடிக்க கடைக்கு போவது போல் போகிறார். 

ஓவர் வெயிட் உடம்புக்கு ஆகாது தல. மோகன்லால் நடித்து இருந்தால் எப்படி இருக்குமோ அந்த Effect வருகிறது. அப்படி ஒரு குண்டு + தொப்பை. வழமை போல் நடராஜன் போல் நடக்கிறார், கோட், சூட், கண்ணாடியுடன் வருகிறார். அரை குறை ஆடைகளுடன் பெண்கள், கொலை, யுவன் என அவரின் படங்களின் இருக்கும் அத்தனை சமாச்சாரங்களும் இருக்கிறன. யுவனின் பாடல்கள் சில பரவாயில்லை ஆனால் அதை படம் பிடித்த விதத்தில் எங்களை சீ என வைத்து விட்டார்.




கடைசியாக ஒன்றே ஒன்றுதான் கேட்டுகொள்கிறேன் தலயிடம்... இனி மேல் கோட், சூட், கண்ணாடியை நம்பி நடிக்க வேண்டாம். கதையை நம்பி நடியுங்கள். முக்கியமாக பில்லா 3 எடுத்து எங்களை கொலைகாரன் ஆக்க வேண்டாம்!!