29 November 2012

ஒலகம் அழிய போதா???

இப்போ எல்லோர் மனதிலும் இருக்கும் விடயம் 21.12.2012 மாயன் என்ற மக்கள் சொன்ன மாதிரி உலகம் அழிந்து விடுமா என்பதே?? பல பேரும் பலவிதமா ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்/செய்கிறார்கள். இந்த மாயன் என்பவர்கள் யார்/வரலாறு என்ன என்ற இதிகாசங்கள் இப்போ உங்களுக்கு சொல்ல வர வில்லை. அழியுமா, இல்லையா என்பதை பற்றி நிறைய பேர் எழுதி இருக்கிறார்கள்; அதனால் நானும் கிறுக்கவும், பிதற்றவும் வந்து இருக்கிறன்.




மேலே உள்ள படம்தான் மாயன்களின் நாட்காட்டி. இதுதான் முடிவடிகிறது 21.12.2012 அன்று.


பல பெரும் பல விதமாக சொல்கிறார்கள், அதில் ஒன்று "நிபுரு" எனும் கோள் பூமியை வந்து தாக்கும் என்று!! அது என்ன "நிபுரு"?? 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடு பட்டு கொண்டு இருக்கும் போது இதை கண்டதாக சொல்கிறார்கள் (நாசா இதை மறுத்து இருந்தது). அதாவது இது வந்து பூமியை தாக்கும் எனவும் அதனால் அழிவு உண்டாகும் எனவும் சொல்கிறார்கள். இது பூமியில் விழும் போது சுனாமி, நிலநடுக்கம் போன்றன ஏற்பட்டு பாரிய அழிவுகள் உண்டாகும் என கூற படிக்கிறது.
 
மேலே உள்ள படத்தை உற்று பாருங்கள்!! சூரியனுக்கு அருகில் ஒரு புள்ளி தெரிகிறது அதுதான் "நிபுரு" என சொல்கிறார்கள். உண்மையை நான் அறியேன். (உங்கள் போனிலோ அல்லது காமராவிலோ நீங்களும் எடுக்கலாம்)

 மற்றையது, பூமியும், சூரியனும் ஒரே கோட்டில் 21.12.2012 சந்திக்கின்றது என்றும், இதன் போது, துருவங்கள் மாற்றம் அடையும் எனவும் பூமி தன்னை மீளமைக்கும் எனவும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, வட, தென் துருவங்கள் மாறும். இன்னமும் சொல்ல போனால் சூரியன் மேற்கே உதிக்கும்!! இந்த மாற்றத்தினால் துருவங்களில் உள்ள பனி மலைகள் உருகி நீர் மட்டம் அதிகரித்து நிலப்பரப்பை நீர் உள்வாங்கி கொள்ளும் எனவும் கூற படுகிறது.



மற்றையது, உலகில் பல எரிமலைகள் பூமிக்கடியில் இருக்கின்றன.குறிப்பாக 7. அதில் ஒன்று அமெர்க்காவில் உள்ள "Yellowstone" எனப்படும் எரிமலை. இந்த எரிமலை வெடிக்கும் எனவும், அதில் இருந்து வெளியேறுவன அந்த இடத்தையே நாசம் செய்து மற்றய எரிமலைகளையும் வெடிக்க வைக்கும் எனவும், இதனால் எல்லா இடமுமே அழிந்து போய் விடும் எனவும் கூற படுகிறது.




இன்னமும் பலகாரணங்கள் கூற படுகிறது. சில வற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். மேலே கூறப்பட்டவை எல்லாம் விஞ்ஞான ரீதியில் கூற பட்டவை. இனி மத ரீதியாக நான் அறிந்த அல்லது எனக்கு கூற பட்டவற்றைசொல்லுகிறேன்.

உலகில்உள்ள எல்லா மதமும் சொல்கிறது என்றோ ஒருநாள் உலகம் அழியும் என்று. ஆனால் எந்த மதமும் இந்த நாள்தான் என்று அறுதியிட்டு சொல்ல வில்லை. ஆனால் எந்த சந்தர்ப்பத்தில் அல்லது கால கட்டத்தில் ஏற்படும் என்று கூற பட்டு இருக்கிறது.

இந்து மதம் சொல்கிறது, கலியுகம் முடியும் போது உலகம் அழியும் என்று. இப்போ நடந்து கொண்டு இருப்பது கலியுகம். இந்த யுகம் முடிந்த உடன் நிச்சயம் அது நடக்கும் என்று சொகிறது. இஸ்லாம் சொல்கிறது, அழிவின் அடையாளமாக, சூரியன் மேற்கில் உதிக்கும் எனவும் அதன் பின் அழியும் எனவும் சொல்கிறது. அன்றைய நாள் வெள்ளிக்கிழமை எனவும் சொல்கிறது    ( 21.12.2012 கூட வெள்ளிகிழமைதான்). இதே போல, கிறிஸ்தவ மதமும், யூத மதமும் வேறு மதங்களும் சொல்கின்றன உலக அழிவை பற்றி.






எனது பார்வையில் :- சுனாமி வருது, நில நடுக்கம் வருது என்று சொன்ன மாதிரி இதுவும் வருது, வந்து போகும்.... அவ்வளவே. ஆனால், சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. "மொட்டை" ரசினி சொன்ன மாதிரி, "சாகிற நாள் தெரிந்தால் வாழ்கிற நாள் நரகம் ஆகிடும்" என்ற மாதிரி வாழப்போகும் நாளை நரகம் ஆக்காதீர்கள்!!!  எலே Be Happy :))

No comments:

Post a Comment