15 June 2012

இந்து சமுத்திரத்தின் முத்து

இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கைத் தீவு பல்லின மக்களையும், கலாச்சாரத்தையும் கொண்ட நாடு. பசுமை நிறைந்த இயற்கை அழகும், பெறுமதி மிக்க இயற்க்கை வளங்களும் நிறையப் பெற்ற இன் நாட்டை நாட்புறமும் எழில் கொஞ்சும் வெண் கடற்கரைகள், தேயிலை தோட்டங்கள் நிறைந்த குறிஞ்சிப் பரல்கள், வளம் கொழிக்கும் வயல் பரப்பு, பாரிய நீர் தேக்கங்கள், உயிரியல் பல்வகைத் தன்மை உடைய வனங்கள், சரணாலயங்கள் எனப் பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. விடுமுறையில் செல்பவர்களும் உள்ளூர் மக்களும் பார்த்து, தங்கி, அனுபவித்து மகிழ்வதற்கு கண்கவர் இடங்கள் இந்த குட்டித் தீவில் உள்ளன.

அவற்றில் சில இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில்,

சிகிரியா
 























இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா கற் பாறையில் அமைக்கபட்ட ஒரு கோட்டையாகும். இது, பல வருடங்களுக்கு முன்பாகக் காசியப்ப மன்னனினால் கட்டப்பட்டது. நாற்புறமும் பச்சை பசேலென வயல் வெளிகளும், நீர்த் தேக்கங்களும் காணப்படும் இப்பாறையின் உச்சியில் சிங்கத்தின் முகத்தைப் போன்ற வாயிலைக் கொண்டதாக இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள தாமரை மலர்களை ஏந்திய பெண்களின் ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை. வியக்க வைக்கும் கட்டடக் கலை நுட்பம், அதன் அமைவிடம், குகை ஓவியங்களின் கலைத் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக சிகிரியாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாறையின் உச்சிக்கு சென்றதும் உங்கள் கண்கள் என்றுமே பாத்திராத ரம்மியங்களை காணப் போவது நிச்சயம்.
 




















இலங்கையில் இருந்தாலோ அல்லது வந்தாலோ இதை பார்க்க தவற வேண்டாம்.
 
 

No comments:

Post a Comment