27 October 2012

பொன்னியின் செல்வன்

எனது வாசிப்பு காமிக்ஸ் புத்தகங்களுடன் மட்டுபடுத்த பட்டு இருந்தது சிறு வயது முதல். சில நேரங்களில் சில சிறு நாவல்களை வாசிக்கும் பழக்கம் உண்டு. காரணம் வாசிப்பதில் உள்ள சோம்பேறித்தனம்!! இருந்தாலும் நான் "பொன்னியின் செல்வன்" வாசிக்க தொடங்கியதன் காரணம், எல்லோரும் ஆகா ஓகோ என்று சொன்னதாலும், பல பேர் அதை திரையில் கொண்டுவர முயற்சி செய்ததும்தான் காரணம். அதனால் வாசிக்க தொடங்கினேன், தொடங்கியது முதல் அதை படித்து முடிக்கும் வரை வேறு நினைப்பு இல்லை. அது ஏன் என்று வசித்தவர்களுக்கு தெரியும், வாசிக்காதவர்கள் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

இன்னமும் என் மனதில் வந்தியத்தவன்,அருள்மொழி வர்மா, ஆதித்த கரிகாலன், குந்தவி, நந்தினி, வானதி, வழுவேட்டயர்கள், ஆழ்வார்கடியான் என பல பேர் உள்ளனர். அந்தளவுக்கு எனை ஆட்கொண்டு விட்டது!


இந்த தொடர் "கல்கி"யில் மூன்று அரை ஆண்டுகள் வந்தது. அதை கிட்டதட்ட ஒருமாசத்தில் வாசித்து முடித்து விட்டேன். இதை முதலிலே முடித்து இருக்க முடியும். T20 உலகக்கிண்ண போட்டி காரணமாக முடியாமல் போய் விட்டது. இதை பல பேர் திரையில் கொண்டுவர முயற்சி செகிறார்கள், ஆனால் அதை அப்படியே கொண்டு வர முடியாது. அப்படி கொண்டு வர வேண்டும் என்றால் "Harry Potter" போல ஒவ்வொரு பாகமா எடுக்க வேண்டும். அது தமிழில் முடியாத காரணம். முக்கிய சில விடயங்களை தொகுத்து ஒரு நல்ல திரைக்கதை மூலம் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கலாம். இதை திரையில் கொண்டு வர எதிர்ப்பதன் காரணம் உண்மைதமையை சிதைத்து விடுவார்கள் என்றுதான், ஆனாலும் இதை வாசிக்கும் நிலையில் பல பேர் இல்லை, வசதியும் இல்லை, ஆகவே திரையில் கொண்டுவந்தால் ஓரளவுக்கு ஏனும் இதை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். நானும் திரையில் காண ஆவலுடன் உள்ளேன்!!

14 October 2012

மாற்றான்

சில படங்களை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றும். அப்படி தோன்றி பார்த்த படம்தான் இது. காரணம் அயன் கூட்டணி மீண்டும். ஆனால் வலைப்பதிவுகளிலும், த்விட்டேரிலும் கடுமையாக விமர்சிக்க பட்ட/படுகிற படம் என்பதால் எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாமல் சென்றேன். அதனாலோ என்னவோ இந்த படம் எனக்கு பிடித்து கொண்டது. சரி இந்த படத்தின் கதை என்ன வென்று பார்த்தால்,

சூர்யாவின் அப்பா(சச்சின்) ஒரு விஞ்ஞானி, அவர் செய்யும் பரிசோதனை முயற்ச்சியில் ஒட்டி பிறக்கும் குழந்தைகள்தான் சூர்யா+சூர்யா. சச்சின், சிறு பிள்ளைகளுக்கான பால் பவுடர் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார் ஆனால் மற்ற கம்பனிகளை விட இவர் குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்து விடுகிறார். அதை அழிக்க சில சக்திகள் முயலுகின்றன. யார் அதை அழிக்க முயலுவது, ஏன் அழிக்க முயலுவது, உண்மையான குற்றவாளி யார்  என்பதை சொல்கிறது படம்.

படம் பார்த்து கொஞ்ச நேரத்திலேயே யார் உண்மையான குற்றவாளி என்பதை அறிந்து கொள்கமுடிகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை சில காட்ச்சிகளில் ஊகிக்க முடிகிறது. பாடல்களின் இசையை போலவும் பின்னணி இசையும் பெரிதாக எடுபட வில்லை. இரு பாடல்களை தவிர. "நாணி கோணி" பாடலின் லொக்கேஷன் சுப்பர். வழமை போல சூர்யா நடிப்பில் அசத்தி இருக்கிறார். (கஜால்)ஒருவரை காதலித்து, அவர் இறந்ததும் மற்றவரை காதலிப்பது என்பது ஆங்கில படங்களில் கூட வந்து இருக்குமோ தெரியா வில்லை. தமிழில் புரச்சி செய்கிறேன் என்று நினைப்பு போல. கஜாலின் கேரக்டர் முக்கியம் என்றாலும் அவருக்கு நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை! இடை வேளையின் பின் ரஷியன் மொழியில் கதைக்கும் போது அப்படியே தமிழில் மொழி பெயர்ப்பது என்பது இரண்டும் கேட்டான் நிலை.


இவ்வளவு ஓட்டை இருந்தும் பிடித்து இருக்கிறது என்றால், பார்க்கும் போது எந்த வித சோர்வையும் தராமல் இருப்பதே காரணம். இவர் எடுத்தது காவிய படமோ அல்ல விருத்துக்கோ அல்லவே!! ஒரு ஹை டெக் மசாலா படம். இங்கு ஓட்டையும் இருக்கும் எல்லாம் இருக்கும். சந்தோசமாக பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம்!!!







இந்த படத்தில் டானியல்  பாலாஜி, "பச்சைக்கிளி முத்துச்சரம்" வில்லன் எல்லோரும் நடிப்பதாக இருந்தது ஆனால் இந்த படத்தில் இல்லை. "Stuck On You" படம் என்று சொன்ன படியால் கதையை அப்படியே மாற்றி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

06 October 2012

தீவு VS தீவுகள்

கிரிக்கெட் ரசிகர்களிடையே சில தொடர்கள் அதிக எதிர் பார்ப்பை ஏற்றி விடும். அந்த வகையில் உலக கிண்ணமும் ஒன்று ஆனால் இது இருபதுக்கு இருபது தொடர். நடப்பது இலங்கையில்.கடந்த இரு வாரங்களாக கதைக்கபட்ட, பார்க்கபட்ட தொடர் நாளைய இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற இருக்கிறது. இந்த முறை போட்டியை நடத்தும் இலங்கை அணியும் கரிபியன் தீவுகள் என அழைக்கப்படும் மேற்கிந்திய அணியும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.



இலங்கை அணியை பொறுத்த வரை, சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் விளையாட போகிறது. அத்துடன் பலம் கொண்ட துடுப்பாட்ட வரிசையையும் பந்து வீச்சையும் தன்னகத்தே வைத்துள்ளது. இலங்கை அணியின் பலமே சுழல் பந்து வீச்சில் இருக்கிறது. அவர்கள் ஓட்டத்தை கட்டுபடுத்துவதுடன் விக்கட்டுகளையும் எடுக்கத்தவருவதில்லை. அதே போல வேக்கப்பந்து வீச்சாளர்களும் தங்கள பணியை திறம்பட செய்கிறார்கள்.

மேற்கிந்திய அணியும் அதே போல துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அவர்களின் பலமே Gayle எனும் தனிமனிதன்தான். அவர் நின்று அடித்து ஆடினார் என்றால் பின் வருவோர்களும் அந்த பணியை செய்வன செய்வார்கள்.

இரு அணிகளும் முதன் முறையாக T20 போட்டியின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருக்கிறார்கள். இலங்கை அணி Gayle லை சுப்பர் 8 போட்டியில் வீழ்த்தியது போல் வீழ்த்தினால் மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை மஹாலே சொன்ன "நாங்கள் அவரை பற்றி கவலை பட வில்லை" என்று சொல்வதிலேயே இருக்கிறது!! அவரின் பெயரை குறிப்பிட்டு சொல்கிறளவுக்குஒரு பீதியை கிளப்பி இருக்கிறார் அரை இறுதியில் அவுஸ்திரலியாவுக்கு எதிராக ஆடிய ருத்திர தாண்டவத்தின் மூலம்.





இலங்கை அணியில் ஆரம்ப துட்டுப்பட்ட வீரர்கள் சிறப்பான ஒரு அடித்தளத்தை இட்டு கொடுத்தார்கலேயாயின் நிச்சயமாக எதிர் அணியினருக்கு சவாலாகா இருக்கும். பாகிஸ்தானுடன் நடந்த அரை இறுதிப்போடியில் மலிங்க ரொம்பவும் சோர்வாகவும் ஒரு வித பயத்துடனும் காணப்பட்டார். அதைக் களைந்து விளயாடுவாராயின் எதிர் அணிக்கு அவரும் சவால் விடுவார் தனது பந்து வீச்சின் மூலம்.

Gayle எனும் போர் வீரன் போர்க்களம் எனும் மைதானத்தில் நின்றால் எதிரிக்கு மரண பயம்தான். அவருடன் Pollard டும் சேர்ந்தான் வான வேடிக்கைதான். ராம்போல் மற்றும் நாரைனே பந்து வீச்சில் கலக்குகிறார்கள்.






      
 
பார்ப்போம் நாளைக்கு தீவுகளா அல்லது தீவா கிண்ணத்தை "முதன் முறையாக" எனும் சொல்பதத்துடன் வெல்கிறது என்று!!