23 July 2012

மாற்றான் படத்தின் கதை என்ன


தமிழ் சினிமாவில் ஒரு படம் வரும் பொழுது அது இந்த படத்தின் தழுவலாக இருக்குமோ, அந்த படத்தின் தழுவலாக இருக்குமோ என்று எல்லாம் இணையத்தளத்திலும் பத்திரிகைகளிலும் அலசி ஆராய்வார்கள். இந்த முறை கைகளில் சிக்கி இருப்பது "மாற்றான்". அது எந்த படத்தின் தழுவலாக இருக்கும் என்பதை படம் வந்த பிறகுதான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் K .V.ஆனந்த் சொல்வது போல் தழுவல் அல்லாமலும் இருக்கலாம். இங்கே ஆராய பட இருப்பது இரண்டு படங்களை பற்றி; Stuck on you(2003) & Alone(2007)


Stuck on you படத்தின் கதை என்ன ?

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் "பாப்" Normal Type. "வால்ட்" Causual Tpye. இருவரும் ரெஸ்டாரண்ட் நடத்திவருகிறார்கள். கஸ்டமர் ஆர்டரை ரெண்டே நிமிஷத்தில் ரெண்டு பேரும் செய்துதரும் ஸ்டைலுக்காகவே இந்தக் கடையில் சாப்பிட கூட்டம் கூடும்.

தன்னுடன் ஒட்டிப்பிறந்த வால்ட் இருப்பதை சொல்லாமலே ’மேபாங்’ என்ற பெண்ணுடன் Letter மூலம் காதலாகிறான் பாப். வால்ட்டுக்கு ஹாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை. இதற்கு வேண்டா வெறுப்பாக பாப் சம்மதிக்க கலிபோர்னியாவில் குடியேறுகிறார்கள். ஹாலிவுட் வாய்ப்பு தேடுகிறான் வால்ட். புளூஃபிலிமில் நடிக்கிறாயா? என ஏராள வாய்ப்புகள் வர அதை ஏற்காமல் முயற்சிக்கிறான். பாப் மண்டைக்காய்வதை பார்த்த வால்ட் பாப்பிற்கு தெரியாமலேயே அவனுடைய காதலியை சர்ப்ரைஸாக வரவைக்கிறான் வால்ட்.


ஒருநாள் பாப்பும் வால்ட்டும் ஒன்றாக படுக்கையில் இருக்க... ‘நீ ஒரு ஹோமோசெக்ஸ் பேர்வழி’ என சண்டை போட்டுவிட்டு ’ஒட்டிப்பிறந்தவர்கள்’ என்கிற விளக்கத்தை ஏற்காமல் போய்விடுகிறாள்!

டிவி தொடரில் வால்ட் புகழ்பெறுவதுடன் அவர்கள் "Conjoined Twins" என்கிற செய்தி மீடியாவில் வர உண்மையறிந்த காதலி திரும்பி வந்து ‘நான் உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன்’ என்கிறாள். பிரச்சனை வேண்டாம் இருவரும் ஆபரேஷன் மூலம் தனியாகிவிடுவோம் என பாப்பின் எதிர்ப்பை மீறி வால்ட் முடிவுசெய்கிறான். 

ஆபரேஷன் சக்சஸ். வால்ட் ஹாலிவுட்டில் வாய்ப்புதேட, பாப் ஊர் திரும்பி ரெஸ்டாரெண்ட் நடத்துகிறான்.ஆனால் ஒட்டியிருந்த போது வால்ட்டுக்கு இருந்த நடிப்புத்திறமை இப்போது இல்லை. பாப்பிற்கும் ஓட்டல் வேலையில் சுறுசுறுப்பு இல்லை. 

வால்ட் ஊர்திரும்பி பாப்புடன் ஓட்டலில் பணி செய்கிறான். ஆனால் இரட்டையராக அவர்கள் இருந்தது தான் கஸ்டமர்களை கவர்ந்த விஷயம். அதனால் கூட்டம் குறைய விசேஷ உடை ஒன்றை தயாரித்து அணிந்து கொண்டு ஒட்டிய பிறவிகளாகவே மாறிவிட வாழ்க்கையும் வியாபாரமும் களைகட்டுகிறது.

நகைச்சுவை உணர்ச்சியோடு எடுக்கப்பட்ட இந்த படத்தைத்தான் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஆக்‌ஷன் ஃபார்முலாவுக்கு ஏற்ப ‘மாற்றான்’ ஆக்கியிருக்கிறார்கள் என்று பேசிக்கிறாங்க. அதில் இரு நடிகர்கள் சோல்டர் ஒட்டியது போல நடித்தார்கள். இதில் சூர்யா ஒருவரே நடித்திருப்பது வியப்பு!


Alone படத்தின் கதை என்ன ?

ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளில் ‘பிம்’ சாந்தமானவள். ‘பிலாய்’ முசுடு. ‘வீ’ எனும் இளைஞனை இந்த சகோதரிகள் சந்திக்கையில் ‘பிம்’ மை அவன் விரும்புகிறான். ‘பிம்’முக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் நானும் அவனை லவ் பண்றேன்  என பிலாய் பிரச்சனை பண்ண....  
ஒரு கட்டத்தில் இருவரும் ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரிய முடிவுசெய்கிறார்கள்.
ஆபரேஷன் மூலம் பிரிக்கிற போது ‘பிலாய்’ இறாந்துவிடுகிறாள். ’பிம்’மும், ’வீ’ யும் தாய்லாந்தை விட்டு வெளியேறி தென்கொரியாவில் வசிக்கிறார்கள். ‘உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என ஒருநாள் பிம்முக்கு போன்வர... ’வீ’யுடன் கிளம்பி வருகிறாள். அம்மாவின் இறுதிச்சடங்குகள் முடிந்து அன்று தன் வீட்டில் பிம் தங்க இறந்து போன பிலாயின் ஆவி பிம்மை துவம்சம் செய்கிறது! 

"மாற்றான்" படம் "அலோன்" படத்தின் கதை தானே? என மீடியாக்கள் டைரக்டர் கே.வி.ஆனந்தை கேள்வியால் துளைக்க!! மிகத்தெளிவாகவும், அழுத்தமாகவும் தன் பதிலைச் சொன்னார் கே.வி.ஆனந்த்.

இது "அலோன்" படத்தின் கதை இல்லை. அந்தப்படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இப்படி ஒரு சர்ச்சை கிளம்பிய பிறகு தான் "அலோன்" படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு. புத்தகம் ஒன்றில் தாய்லாந்து நாட்டில் பிறந்த கன்ஜாய்ண்டு ட்வின்ஸ் பற்றி படித்ததன் பாதிப்பு தான் "மாற்றான்" என விளக்கமாகச் சொன்னார் கே.வி.ஆனந்த்




இதே நேரத்தில் பிரியாமணியும் "சாருலதா" என்கிற படத்தில் நடிக்கிறார். அது "Alone" படத்தின் தழுவல் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள். இருந்தாலும் இந்தியாவில் வரும் (சாருலதா முதலில் வரா விட்டல்) Conjoined Twins படம் என்கிற பெருமையை பெரும்; அதே நேரத்தில் சூர்யாவின் கடின உழைப்பும் ஆனந்தின் கடின உழைப்பும் நிச்சயாமாக ரசிக்கபடும் என்று நம்புகிறோம். "கோ" படமும் ஒரு தழுவல் படம். என்றாலும் அது சுப்பர் ஹிட் ஆனது. எனக்கு என்னவோ படத்தின் கதை "Alone" படத்தின் தழுவலாகவும் சில காட்ச்சிகள் "Stuck on you" படத்தின் நகலாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போம் மாற்றான் "அசலா" "நகலா" என்று!!
 


22 July 2012

தலைவன்

இந்த பெயரை பார்த்தவுடன் நீங்கள் நினைத்தி இருப்பீர்கள் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவன் படத்தை பற்றிய முன்னோட்டமாக இருக்கும் என்று. இது இப்போ வாழும் மிகவும் எளிமையனா ஒரு தலைவன் பற்றியது. இது சுவாரசியமான அதே நேரத்தில் ஜோசிக்க வேண்டிய விடயமும் கூட. அதனால்தான் நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இரானிய ஜனாதிபதி "மஹ்மூத் அஹ்மேடினஜாத்" தான் அவர்,



1. அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது.

2. அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில்தான்.

3. இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே.

4. படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD.
  (PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology)

5. இவரது வங்கி நிலுவை 0

6. இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும். தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்.

7. அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8. பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்.

9. பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10. தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான
திரைச்சீலைகளை
ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்.

11. நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாரம்.
 



இருக்காங்களே நம்ம நாட்டு தலைவர்கள்.....
இனி எதிர்காலத்திலாவது இது போன்ற நல்ல தலைவர்கள் வர பிராத்திப்போமாக !!!

20 July 2012

மீண்டும் ஒரு யுத்தம்...இந்தியா எதிர் இலங்கை

மறுபடியும் தோணியின் தலைமையில் இந்திய அணி  இங்கு வந்துள்ளது.
இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக இங்கு வந்து விளையாடி கிண்ணத்தையும் வென்று சென்று இருக்கிறது. ஆனால் நன்கு பழக்க பட்ட மைதானங்களில் மாத்திரமே விளையாடி உள்ளது. இந்த முறை முற்றிலும் பழக்க மில்லாத இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மைதானத்தில் விளையாட உள்ளது(இரண்டு போட்டி) அத்துடன் பல்லேகலயிலும் ஒரு போட்டி உள்ளது மிகுதி இரு போட்டியும் நன்கு பழக்க பட்ட கொழும்பில் விளையாட உள்ளது.

இலங்கை அணியை பொறுத்த வரை, தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறது மற்றும் விளையாட இருக்கிறது. அவர்களின் மிக பெரிய பலம் என்றால் சொந்த மைதானத்தில் விளையாடுவது என்பதுதான். அத்தோடு, பாகிஸ்தான் அணியுடனான வெற்றி இன்னும் தென்பை தரும். அணியில் உள்ள சிரேஷ்ட வீரகளுடன் இளம் வீர்களும் கலக்குகிறார்கள். முக்கியமாக மகெல மற்றும் சங்க நல்ல போர்மில் இருக்கிறார்கள். அந்த நிலை தொடர்ந்தால் இதிலும் வெற்றி வாகை சூடலாம்.

இந்திய அணியை பொறுத்த வரை, அவர்கள் தொடர்ந்து ஆறு வாரமாக ஓய்வில் இருக்கிறார்கள். அது சில நேரங்களில் பலமாகவும் சில நேரங்களில் பலவீனமாகவும் போகலாம். இந்திய அணிக்கு உள்ள பெரிய பலவீனமே அதன் பந்து வீச்சுதான். ஜாகிர்கான் மற்றும் யாதவின் பந்து வீச்சு  சிறப்பாக இருந்தால் இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கலாம். ஏன் என்றால் இந்திய அணியின் துடுப்பாட்டம் வழமை போல் பலமாக உள்ளது. சேவாக், காம்பிர், தோணி, ரைனா, கோலி,  ஷர்மா மற்றும் பதான் உள்ளார்கள்.



இதுவரை இந்திய அணி இங்கு 76 போட்டிகளில் விளையாடி 34 இல் வெற்றியும் 33 இல் தோல்வியும் அடைந்து உள்ளது. ஆக, இரு அணிகளும் சம வெற்றி தோல்விகளுடன் உள்ளது. ஆனால் இறுதியாக 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற போட்டியில் 3-2 என்ற அடிபடையில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடந்த 5 போட்டிகளில் இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வென்று உள்ளது. நாளை முதல் போட்டி அம்பாந்தோட்டையில் தொடங்க உள்ளது. பார்ப்போம் தோணியின் தலைமையில் இந்திய அணி சிங்கத்தை வீழ்த்துகிறதா அல்லது வீழ்கிறதா என்று.
 




15 July 2012

பில்லா - வேணாம், வலிக்குது, அழுதிடுவேன்


   
சில பல காரணங்களால் முதலிலேயே பார்த்த படத்தை பற்றி எழுத முடிய வில்லை. இருந்தாலும் படம் எப்படி என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். 

ஒரு படத்துக்கு ஓவர் எதிர் பார்ப்பு ஆகாது என்பதை 7ஆம் அறிவுக்கு பிறகு மீண்டும் நிருபித்து இருக்கும் படம். அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்று நினைத்தாரோ தெரிய வில்லை இயக்குனர். அப்படி ஒரு கொலை வெறி தாக்குதல் எங்கள் மீது.  

கதை என்று பார்த்தால், இலங்கையில் இருந்து அகதியாக மண்டபத்துக்கு போகிறார். அங்கு ஒரு வலது குறைந்த ஆளை அடிப்பதுடன் தொடங்குகிறது அவரின் டான் வாழ்க்கை. அடி வாங்கியவர் வில்லனுடன்(பல வில்லன்கள் உண்டு) கூட்டு சேர்ந்து கொண்டு இவரையும் இவர் நண்பரையும்(பில்லா வில் அஜித்தின் நண்பராக வரும் ரஞ்சித்)  அனுப்புகிறார்கள். அதில் வைரங்கள் இருக்கிறது என்று தெரியாமலே போகிறார்கள். போலீஸ் செக் பண்ணும் போதுதான் தெரிய வருகிறது இதில் வைரங்கள் இருக்கிறது என்று. போலீஸ் எல்லோரையும் போட்டு தள்ளி விட்டு வைரங்களை நேர்மையாக அண்ணாச்சியிடம் ஒப்படைக்கிறார்கள். இவர்களின் நேர்மையை பார்த்த அண்ணாச்சி இவர்களுக்கு வேலை கொடுக்கிறார். பிறகு எப்படி டேவிட் பில்லா எப்படி டான் ஆனான் என்பதை DVD யில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் படத்தில் நான் ரசித்த விடயங்கள், படத்தில் வரும் locations , ராஜசேகரின் ஒளிப்பதிவு, புருன அப்துல்லாவின் கவர்ச்சி, இரா.முருகனின் வசனங்கள். வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

ரொம்ப அழ வைத்த விடயம், 5க்கும் 10க்கும் அல்லாடி கொண்டு இருப்பவர் போடும் சூ வை பாருங்கள். Machine Gunனால் வில்லன்களில் ஆட்கள் சுடுகிறார்கள் இவர் Shotgunனால் சுடுகிறார். அவர்கள் பட பட என சுடும் ஒன்றும் பட வில்லை இவர் டோப்பு டோப்பு என்று சுடும் ஒவ்வொன்றும் படுகிறது. தலையில் அடி பட்டு மாடி படியில் இருந்து  கீழ் விழுந்து ஏதோ கட்டிலில் இருந்து எழும்பியவர் மாதிரி எழுந்து அடியாட்களின் கதையை முடிக்கிறார். இன்னொரு வில்லன் ஜெட் லீ மாதிரி அவரின் ஆரம்ப காட்ச்சியில் தூள் பின்னுகிறார் ஆனால் கடைசியில் வடிவேலு மாதிரி அடி வாங்கி சாகிறார். அந்த ஆயுத Factoryக்கு எந்த வித எதிர்ப்பு இல்லாமல் சும்மா Tea குடிக்க கடைக்கு போவது போல் போகிறார். 

ஓவர் வெயிட் உடம்புக்கு ஆகாது தல. மோகன்லால் நடித்து இருந்தால் எப்படி இருக்குமோ அந்த Effect வருகிறது. அப்படி ஒரு குண்டு + தொப்பை. வழமை போல் நடராஜன் போல் நடக்கிறார், கோட், சூட், கண்ணாடியுடன் வருகிறார். அரை குறை ஆடைகளுடன் பெண்கள், கொலை, யுவன் என அவரின் படங்களின் இருக்கும் அத்தனை சமாச்சாரங்களும் இருக்கிறன. யுவனின் பாடல்கள் சில பரவாயில்லை ஆனால் அதை படம் பிடித்த விதத்தில் எங்களை சீ என வைத்து விட்டார்.




கடைசியாக ஒன்றே ஒன்றுதான் கேட்டுகொள்கிறேன் தலயிடம்... இனி மேல் கோட், சூட், கண்ணாடியை நம்பி நடிக்க வேண்டாம். கதையை நம்பி நடியுங்கள். முக்கியமாக பில்லா 3 எடுத்து எங்களை கொலைகாரன் ஆக்க வேண்டாம்!!

12 July 2012


             பஞ்சா


தமிழில் வருகிற அதிகாமான படங்கள் தெலுங்கில் இருந்து சுடப்படுவதால் தெலுங்கு படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தெலுங்கு படங்களை Dowenload செய்து பார்ப்பேன். அப்படி பார்த்த படங்கள் பல, இதை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற காரணம் "நடராஜன்" அடுத்ததாக நடிக்கும் படம் இது என்ற கருத்து நிலவுவதால் உங்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன்!!

நடிகர்கள்: பவன் கல்யான் (நடராஜன்), அடவி சேஷ்(ஆர்யா), சார ஜேம்ஸ் (நயன்தாரா), அஞ்சலி லாவண்யா(தாப்சீ), ஜக்கி ஷரப் (கிஷோர், அதுல் குல்கார்னி(அதுல் குல்கார்னி) மற்றும்படி விஷ்ணுவர்தனின் அதே தொழிநுட்ப அணிதான் இங்கும்.

பவன் ஜாக்கியிடம் அடியாளாக வேலை செய்கிறார், அப்படியே சாராவையும் லவ் பண்ணுகிறார். இப்போ  ஜாக்கியின் மகன் வெளி நாட்டில் இருந்து வருகிறார் வந்ததும் சும்மா இல்லாமல் பவனின் சிநேகிதியிடம் வம்புபன்ன அவர் இறந்து விடுகிறார். இதை பார்த்த பவன் அவரை போட்டு தள்ள, இவரை போட ஜக்கி ஆட்களை அனுப்புகிறார். தன் உயிரை பாதுகாத்து கொள்ள பவன் சாராவின் கிராமத்துக்கு செல்கிறார், அங்கு அடிக்கிறார், ஆடுகிறார், பாடுகிறார் எல்லாம் செய்கிறார்!!! படத்தை முடிக்க வேணும் என்பதற்க்காக,கடைசியில் வில்லனின் ஆட்கள் சாராவை கடத்துகிறார்கள். கடைசியில் இவர் ஜாக்கியை போடுவதுடன் படம் சுபம்!!

இந்த படத்தை பார்த்து முடிக்க எனக்கு மூன்று நாட்கள் சென்றது!! பார்த்து கொண்டு இருக்கும் போதே நித்திரை கொண்டு விட்டேன். அவ்வளவு சிறந்த படம் நித்திரை வராதோர்க்கு. இதில் உருப்படியான, ரசிக்க கூடிய சில விடயங்கள் இருந்தன. யுவனின் இசை. பாடல்கள், பின்னணி இசை என்று புகுர்ந்து விளையாடி விட்டார். மற்றது ஒளிப்பதிவு. முதல் முறையாக விஷ்ணுவர்த்தன் நிரவ் ஷா விடம் இருந்து வேறு ஒருவரிடம் சென்று இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரின் ஒளிப்பதிவை நான் ரசித்தேன். மற்றது, பிரேமானந்தத்தின் காமெடி. இங்கு சந்தானம் என்றால் அங்கு அவர் போல. பின்னுகிறார். அந்த, பாப்பாராயுடு பாடலில் செம கலக்கல்.

மற்றும் படி ஒன்றும் இல்லை. படம் தொடங்கும் பொது ஒரு விறு விறுப்பு.... இடைவேளை முடிந்து போக கூடாது என்பதற்க்காக இடைவேளைக்கு முன் ஒரு பட படப்பு.... படத்தை முடிக்க வேணும் என்பதற்க்காக கடைசியில் ஒரு பத பதப்பு..... அவ்வளவுதான்!!







ஆனால், நடராஜனுக்கு இது கொஞ்சம் சரி வரும் போல் இருக்கிறது. காரணம், இதிலும் கண்ணாடி போடலாம், கோட், சூட் போடலாம் மற்றது பெயருக்கு ஏற்ற மாதிரி நல்லா நடக்க சந்தர்ப்பம் உள்ளது. பார்ப்போம் நடராஜன் பவன் மாதிரி நடிகிறாரா அல்லது பெயருக்கே ஏற்ற மாதிரி நடிகிறாரா என்று.